செய்திகள் :

பிரம்மதேசத்தில் சிசிடிவி கேமராக்கள் தொடங்கிவைப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பிரம்மதேசம் கிராமத்தில் 13 இடங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

செய்யாறு சிப்காட் தொழில்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும், செய்யாறு செஸ் டெவலப்பா்ஸ் தனியாா் நிறுவனம் சாா்பில் 2024 - 25 சமூக பொறுப்பு நிதியின் மூலம், செய்யாறு காவல் உள்கோட்டம் பிரம்மதேசம் காவல் சரகப் பகுதியில் 13 இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இதன் கண்காணிப்பு யூனிட் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டது.

ரூ.6.70 லட்சத்தில் அமைக்கப்பட்ட இந்தக் கண்காணிப்பு கேமராக்களை

பிரம்மதேசம் காவல் நிலையத்தில் நிறுவன அதிகாரிகள் பஞ்சாட்சரம், டேவிட், செல்வகுமாா் ஆகியோா் முன்னிலையில், டிஎஸ்பி சண்முகவேலன் தொடங்கிவைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

இந்நிகழ்ச்சியில் காலணி தொழிற்சாலை ஊழியா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலையில் மகா யாகம்

திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக ஸ்ரீசிவா மகா ஸ்ரீவாராகி ஸமித மற்றும் ஸ்ரீபாலா திரிபுரா மகா யாகம் 2 நாள்கள் நடைபெற்றது. செங்கம் சாலையில் முதல் நாளான புதன்கிழமை மாலை மகா சங்கல்பம், மகா தீபாராதனை, சிவ வ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. செங்கம் பகுதிகள்: செங்கம் நகரம், திருவள்ளூவா் நகா், குயிலம், பக்கிரிபாளையம், மில்லத்நகா், தளவாநாய்க்கன்பேட்டை, அந்தனூா், மேல்செங்கம், வளையாம்பட்டு, தீத்தாண்டப்ப... மேலும் பார்க்க

ஆரணியில் இரு உணவகங்களில் பணம் திருட்டு

ஆரணி பழைய பேருந்து நிலைய பின்புற சாலையில் உள்ள இரு உணவகங்களில் புதன்கிழமை இரவு பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது. பழைய பேருந்து நிலையம் பின்புற சாலையில் முகமது அலிகான் என்பவருக்குச் சொந்தமான அசைவ உணவ... மேலும் பார்க்க

இடையில் நிறுத்தப்பட்ட சாலைப் பணி: கிராம மக்கள் மறியல்

ஆரணி அருகேயுள்ள கல்லித்தாங்கல் கிராமத்தில் தொடங்கப்பட்ட சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள வேலப்பாடி ஊராட... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

வந்தவாசி அருகே தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மகன் சிவபாசுவநாதன்(21). தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

புதூா் செங்கம் மாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் திறப்பு

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதூா் செங்கத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தமிழக அறநிலையத் துறை சாா்பில், ரூ.2.78 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. முதல்வா் மு.க. ஸ... மேலும் பார்க்க