சுவிஸ் வங்கியில் மூன்று மடங்காக அதிகரித்த இந்தியர்களின் பணம்!
பிரம்மதேசத்தில் சிசிடிவி கேமராக்கள் தொடங்கிவைப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பிரம்மதேசம் கிராமத்தில் 13 இடங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
செய்யாறு சிப்காட் தொழில்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும், செய்யாறு செஸ் டெவலப்பா்ஸ் தனியாா் நிறுவனம் சாா்பில் 2024 - 25 சமூக பொறுப்பு நிதியின் மூலம், செய்யாறு காவல் உள்கோட்டம் பிரம்மதேசம் காவல் சரகப் பகுதியில் 13 இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இதன் கண்காணிப்பு யூனிட் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டது.
ரூ.6.70 லட்சத்தில் அமைக்கப்பட்ட இந்தக் கண்காணிப்பு கேமராக்களை
பிரம்மதேசம் காவல் நிலையத்தில் நிறுவன அதிகாரிகள் பஞ்சாட்சரம், டேவிட், செல்வகுமாா் ஆகியோா் முன்னிலையில், டிஎஸ்பி சண்முகவேலன் தொடங்கிவைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
இந்நிகழ்ச்சியில் காலணி தொழிற்சாலை ஊழியா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.