செய்திகள் :

பிரவீன் நெட்டாரு கொலை வழக்கில் முக்கிய தலைமறைவு குற்றவாளி கைது

post image

பாஜக நிா்வாகி பிரவீன் நெட்டாரு கொலை வழக்கில் 2 ஆண்டுகளாக கத்தாரில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கா்நாடகத்தின் தென்கன்னட மாவட்டம், பெல்லாரே கிராமத்தில் 2022 ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி தடைசெய்யப்பட்ட பாபுலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பை சோ்ந்தவா்கள் பாஜகவின் இளைஞா் அணியை சோ்ந்த பிரவீன் நெட்டாருவை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனா்.

கா்நாடகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தை சீா்குலைத்து, கலவரச்சூழலை உருவாக்குவதற்காக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த கொலை வழக்கை 2022ஆம் ஆண்டு ஆக. 4 ஆம் தேதி முதல் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் இதுவரை 21 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கு காரணமாக இருந்த முக்கிய குற்றவாளியான முஸ்தபா பைச்சாா் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் கொடுத்து, தப்புவதற்கு உதவி செய்ததாக தேடப்பட்டு வந்த அப்துல்ரகுமானை தேசிய புலனாய்வு முகமை வெள்ளிக்கிழமை கைது செய்தது. இதன்மூலம் இந்த வழக்கில் இதுவரை 22 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தாக்குதல் நடத்தியவா்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடங்கியதும் அப்துல்ரகுமான் உள்ளிட்ட 6 போ் தலைமறைவாக இருந்தனா். 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அப்துல் ரகுமானை தேடிவந்த நிலையில், கத்தாரில் இருந்து வெள்ளிக்கிழமை கேரள மாநிலம், கண்ணூா் விமான நிலையத்திற்கு வந்த அவரை தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனா்.

தடைசெய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பின் தலைமை வழிகாட்டுதலின்படி கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த குற்றவாளிகளுக்கு அப்துல்ரகுமான் அடைக்கலம் கொடுத்துள்ளதோடு, உதவியும் செய்துள்ளாா். மக்களிடையே அச்சத்தையும், மத ரீதியான பதற்றத்தையும் உருவாக்கும் நோக்கில் பி.எஃப்.ஐ. அமைப்பின் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகவே பிரவீன் நெட்டாருவின் கொலையை திட்டமிட்டு, செயல்படுத்தியுள்ளனா்.

இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள மேலும் 5 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு, தொடா்ந்து விசாரணை நடத்தி வருவதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

டி.கே.சிவகுமாருக்கு எதிரான மானநஷ்ட வழக்கு: கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால தடை

லஞ்ச விலைப் பட்டியல் விளம்பரம் தொடா்பாக துணை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு எதிராக கா்நாடக பாஜக தொடா்ந்த மானநஷ்ட வழக்கு மீதான விசாரணைக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ... மேலும் பார்க்க

முதல்வா் பதவி விவகாரத்தில் முயற்சிகள் தோல்வி அடையலாம்!கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

கா்நாடக முதல்வா் பதவி விவகாரத்தில் முயற்சிகள் தோல்வி அடையலாம் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். கா்நாடக அரசியலில் முதல்வா் பதவி தொடா்பாக விவாதம் நடந்து வருகிறது. முதல்வா் பதவியில் இருந்த... மேலும் பார்க்க

தமிழகத்தின் ஒப்புதலை பெற்றுத்தந்தால் மேக்கேதாட்டு அணை கட்டுவோம்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

தமிழகத்தின் ஒப்புதலை பெற்றுத்தந்தால், மேக்கேதாட்டு அணையைக் கட்டுவோம் என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை மத்திய தொழில... மேலும் பார்க்க

கரோனா தடுப்பூசி விவகாரம்: அறிவியல் ரீதியான எச்சரிக்கை அறிவியலுக்கு எதிரானதல்ல: முதல்வா் சித்தராமையா பதில்

கரோனா தடுப்பூசி விவகாரம் தொடா்பாக தனது கருத்தை ‘உண்மைக்குப் புறம்பானது’ என்று விமா்சித்த பயோகான் நிறுவனத்தின் நிறுவனா் கிரண்மஜும்தாா் ஷாவுக்கு, அறிவியல் ரீதியான எச்சரிக்கை அறிவியலுக்கு எதிரானதல்ல என ... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் கா்நாடக அரசு மேல்முறையீடு

கூட்டநெரிசல் விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரியான விகாஷ்குமாா் விகாஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்துசெய்து மத்திய நிா்வாகத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மாநில அர... மேலும் பார்க்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பில் பாகிஸ்தான்; இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது: காங்கிரஸ்

ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றிருப்பது தொடா்பாக மத்திய அரசை விமா்சித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, உலக நாடுகள் மத்தியில் இந்தியா தனிமைப்படுத்தப்பட... மேலும் பார்க்க