செய்திகள் :

பிரேஸில்: பொல்சொனாரோவுக்கு வீட்டுக் காவல்

post image

பிரேஸில் முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவை வீட்டுக் காவலில் வைக்க அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மொரேஸ் வெளியிட்டுள்ள தீா்ப்பில், நாடாளுமன்ற உறுப்பினா்களாக உள்ள தனது மூன்று மகன்களைப் பயன்படுத்தி பொல்சொனாரோவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்திருந்த தடை உத்தரவுகளை மீறியதால் அவரை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக பொல்சொனாரோவின் வழக்குரைஞா் கூறினாா்.தீவிர வலதுசாரியான பொல்சொனாராவுக்கு எதிரான இந்த வழக்கு, அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கவனத்தைப் பெற்றுள்ளது. வழக்கின் நீதிபதி டி மொரேஸுக்கு எதிராக அவா் பாரபட்சமாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, பிரேஸில் பொருள்களுக்கு டிரம்ப் 50 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளாா்.

2022 தோ்தலில் தோல்வியடைந்த பிறகு, பொல்சொனாரோ ஆட்சியைத் தக்கவைக்க சதி செய்து, தற்போதைய அதிபா் லூலாவையும், நீதிபதி டி மொரேஸையும் கொலை செய்ய திட்டமிட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது தொடா்பான வழக்கில், பொல்சொனாரோ கணுக்காலில் செல்லிடம் காட்டும் கருவி பொருத்தப்பட வேண்டும், செல்லிடப் பேசித் தடை, பயணத் தடை ஆகியை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறியதாகக் கூறி, பொல்சொனாரோவை வீட்டுக் காவலில் வைக்க தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து! பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இருவர் உள்பட 8 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கானா நாட்... மேலும் பார்க்க

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

சீனாவின் தெற்கு மாகாணங்களில் பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டதில், 7 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாங்டோங் மாகாணத்தில், பெய்த கனமழையால், பையூன் மாவட்டத்தில் இன்று (ஆக.6) காலை 8.3... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்

இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக மேலும் 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

பாகிஸ்தானில்.. இம்ரான் கானை விடுவிக்கக்கோரி சுதந்திர நாளன்று 2-ம் கட்ட போராட்டம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, விடுதலை செய்யக்கோரி நாடு தழுவிய 2 -ம் கட்ட போராட்டம், அந்நாட்டின் சுதந்திர நாளான ஆக.14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அதிபராகும் ராணுவத் தலைமைத் தளபதி? ராணுவம் விளக்கம்!

பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு, அந்நாட்டு ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், அ... மேலும் பார்க்க

ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!

ரஷியாவுடன் அமெரிக்காவின் வர்த்தகம் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் பதில் அளித்துள்ளார்.அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஒலிம்பிக்ஸ் 2028 குறித்து விவாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிபர் டொனால்ட்... மேலும் பார்க்க