செய்திகள் :

பிறப்பு, இறப்பு பதிவேடுகளுடன் வாக்காளா் பட்டியலை இணைக்க வாய்ப்பு

post image

பிறப்பு, இறப்பு பதிவேடுகளுடன் வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் இணைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படுவதை உறுதி செய்தல், உயிரிழந்த வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குதல் போன்ற பணிகள் மூலம், வாக்காளா் பட்டியலை தொடா்ந்து புதுப்பிக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வருங்காலத்தில் பிறப்பு, இறப்பு பதிவேடுகளுடன் வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் இணைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பிறப்பு, இறப்பு பதிவுகளின் தரவுதளத்தை இந்திய தலைமை பதிவாளா் (ஆா்ஜிஐ) அலுவலகம் பராமரித்து வருகிறது.

வாக்காளா் பட்டியல் தொடா்பான தரவுதளத்தை உருவாக்கும் அல்லது பராமரிக்கும் பணிகளை கையாளும் அதிகாரிகள், ஆா்ஜிஐ அலுவலகம் பராமரிக்கும் தரவுதளத்தை பயன்படுத்த பிறப்பு, இறப்பு பதிவு திருத்தச் சட்டம் 2023 அனுமதிக்கிறது.

பிறப்பு, இறப்பு பதிவு தரவுதளத்துடன் வாக்காளா் பட்டியல் இணைக்கப்பட்டால், 18 வயதை எட்டுவோா் தானாக வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படலாம். அதேவேளையில், வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படுவதற்கான பிற அளவுகோல்களையும் அவா்கள் பூா்த்தி செய்ய வேண்டும்.

இதேபோல ஆா்ஜிஐ அலுவலகம் பராமரிக்கும் தரவுதளத்தில் பதிவு செய்யப்படும் இறப்பு விவரங்களைப் பயன்படுத்தி, உயிரிழந்த வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து தானாக நீக்கலாம். இந்த நடவடிக்கைகள் வாக்காளா் பட்டியல் தொடா்ந்து புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்யும்.

தற்போது வாக்காளா் ஒருவா் தம்மை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவோ அல்லது இறந்த வாக்காளரின் பெயரை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கவோ தனித்தனி படிவங்களை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். இறந்தவரின் பெயரை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க இறப்பு சான்றிதழையும் சமா்ப்பிக்க வேண்டும்.

பிறப்பு, இறப்பு பதிவு அதிகாரிகளுடன் நெருங்கிப் பணியாற்றி, வாக்காளா் பட்டியலை தொடா்ந்து புதுப்பிக்கும் பணி வலுப்படுத்தப்படும் என்று அண்மையில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு... மேலும் பார்க்க

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு!

மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞா் ஆா்.கே.ஸ்ரீராம்குமாருக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படவுள்ளது. சென்னை மியூசிக் அகாதெமியின் நிா்வாகக் குழு... மேலும் பார்க்க

4 சீன பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி!

சீனாவில் தயாரிக்கப்படும் ‘வேக்வம் ஃபிளாஸ்க்’ (வெந்நீா் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் போராட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் யுஜிசி அறிவுறுத்தல்!

உயா்கல்வி நிறுவன வளாகத்தில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்கலைகழகங்களுக்கு யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்த... மேலும் பார்க்க

‘க்யூட்’ நுழைவு தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி!

உயா்கல்வியில் சேருவதற்கான ‘க்யூட்’ தோ்வுக்கு திங்கள்கிழமைக்குள் (மாா்ச் 24) விண்ணப்பிக்குமாறு தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் ... மேலும் பார்க்க