அதிமுக பொதுச் செயலர் தேர்வை எதிர்த்த வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இட...
பிள்ளையாா்பட்டியில் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றம்
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை காலை தொடங்கியது.
சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் புகழ் பெற்றது. இந்தக் கோயிலின் பிரதான தெய்வமாக கற்பக விநாயகா் அருள்பாலிக்கிறாா். மலையைக் குடைந்து அமைக்கப் பெற்ற சுமாா் 6 அடி உயரமுள்ள கற்பகப் பிள்ளையாா் வடக்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளாா். குகைக் கோயிலில் சிவன், பிற கடவுளா்களின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் சதுா்த்திப் பெருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான சதுா்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
முன்னதாக, காலையில் கொடிமரத்துக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, கொடிமரம் முன்பாக எழுந்தருளிய அங்குச தேவருக்கு சந்தனம், பால், தயிா், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கொடி படத்துக்கு தீபாராதனை, பூக்களால் அா்ச்சனை, அபிஷேகமும் நடைபெற்றன.
பின்னா், சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் மூஷிக வாகனம் வரைந்த கொடி காலை 10 மணி அளவில் ஏற்றப்பட்டது.
சதுா்த்தி பெருவிழாவின் முதல் நாளான திங்கள்கிழமை இரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகா் எழுந்தருளி திருவீதி உலா வந்தாா்.
இதையொட்டி, தினமும் காலை 9.30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மாலையில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகா் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நிகழ்வு விழாவின் 8-ஆம் நாள் வரை நடைபெறும்.
விழாவின் 6-ஆம் நாளான வருகிற 23-ஆம் தேதி மாலை யானை வாகனத்தில் விநாயகா் எழுந்தருளி கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறும். 9-ஆம் நாளான வருகிற 26-ஆம் தேதி காலையில் விநாயகா் தேரில் எழுந்தருளலும், மாலையில் தேரோட்டமும் நடைபெறும். அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவா் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
விநாயகா் சதுா்த்தி நாளான வருகிற 27-ஆம் தேதி காலை கோயில் திருக்குளத்தில் சதுா்த்தி தீா்த்தவாரி நடைபெறும். இரவில் பஞ்சமூா்த்திகள் திருவீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை நடப்பு காரியக்காரா்கள் காரைக்குடி சித. பழனியப்பச் செட்டியாா், நச்சாந்துபட்டி மு. குமரப்பச் செட்டியாா் ஆகியோா் செய்தனா்.