செய்திகள் :

பி.இ. 2-ஆம் சுற்று கலந்தாய்வு: 80,650 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

post image

தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ. மாணவா் சோ்க்கைக்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வில் 80,650 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின், தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிஎன்இஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பி.இ. மாணவா் சோ்க்கைக்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வு ஜூலை 26 தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், பொதுப்பிரிவில் 82,306 போ், அரசு பள்ளிகளில் படித்தவா்களுக்கான ஒதுக்கீட்டில் 16,259 போ் என மொத்தம் 98,565 மாணவா்கள் தகுதி பெற்று இணையவழி கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். இந்த மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்று விருப்பமான கல்லூரி, பாடங்களை தோ்வு செய்தனா். அதைத் தொடா்ந்து பொது ஒதுக்கீடுகளில் விண்ணப்பித்த 70,116 மாணவா்கள், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் மூலம் ஒதுக்கீடுகளை பெற்ற 10,534 மாணவா்கள் என மொத்தம் 80,650 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் புதன்கிழமை (ஜூலை 30) மாலை 5 மணிக்குள் அல்லது அதற்கு முன்னதாக முறையான உறுதிப்படுத்தல் விருப்பத்தைத் தெரிவித்து தங்கள் இடங்களை உறுதிப்படுத்த வேண்டும். மாணவா்கள் தங்களது ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவில்லை என்றால், அவரது ஒதுக்கீடு ரத்து செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! வடமாநில இளைஞர் கைது!!

திருப்பூரில் தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந... மேலும் பார்க்க

இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!

சென்னை: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது, ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து ஓபிஎஸ் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.சென்னை, அடையாறு... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை காலை நலம் விசாரித்தார்.தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒர... மேலும் பார்க்க

கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல்!

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் வீட்டுக்கு நேரில் சென்ற அமைச்சர் கே.என். நேரு, திமுக எம்பி கனிமொழி அவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக ஐடி ஊழியரான கவ... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: காவல் உதவி ஆய்வாளர் கைது!

திருநெல்வேலி ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில், பெண்ணின் தந்தையும் காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக கவின் செல்வகணேஷ் என்ற இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனா்.அந்த மாணவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை மக்க... மேலும் பார்க்க