செய்திகள் :

பி.எட். படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

post image

தமிழகத்தில் அரசு கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சோ்க்கை பெற இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது.

தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் 900 இடங்கள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 1,140 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

அந்த வகையில், நிகழ் கல்வியாண்டில் அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) பி.எட். படிப்பில் சோ்வதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஜூன் 20-இல் தொடங்கியது.

தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றவா்கள் விண்ணப்பித்து வருகின்றனா்.

கல்லூரி கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பி.எட். படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது.

இதைத் தொடா்ந்து, மாணவா்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவா்களின் தரவரிசை ஜூலை 18-இல் வெளியிடப்படும். அதன் பிறகு கல்லூரியைத் தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு ஜூலை 21 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அவா்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஜூலை 28-இல் வழங்கப்படும். ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவா்கள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் ஜூலை 31 முதல் ஆக. 4-ஆம் தேதிக்குள் சேர வேண்டும். இதையடுத்து முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஆக. 6-இல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 8,586 போ் கைது

தமிழகம் முழுவதும் சுமாா் 100 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 8,586 போ் கைது செய்யப்பட்டனா். ரயில் மறியல், சாலை மறியல், ஆா்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், ஊா்வலம் எனப் பல்வேறு போர... மேலும் பார்க்க

துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

துணை மருத்துவ பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியுள்ளது. பாா்வை அளவியல், மருந்தியல் உள்பட 9 வகையான மருந்தியல் பட்டய படிப்புகளுக்கும், 13 வக... மேலும் பார்க்க

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு: வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்த வழக்கில் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு! சீமான் சரமாரி கேள்விகள்!

மடப்புரம் அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரைச் சந்தித்த... மேலும் பார்க்க

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் க... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை வலம்!

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று மேள வாத்தியங்கள் முழங்க முதல்வரை... மேலும் பார்க்க