செய்திகள் :

பீகார்: பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல்! - ரூ.25 கோடி மதிப்பிலான நகை கொள்ளை

post image

பீகாரின் அர்ராவில் உள்ள தனிஷ்க் ஷோரூமில் இன்று ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர்.

பீகார் மாநிலம், அர்ரா காவல் நிலையப் பகுதியில் உள்ள கோபாலி சவுக் பகுதியில் தனிஷ்க் ஜூவல்லரியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக் கடைக்குள் புகுந்த ஆயுதமேந்திய கொள்ளைக் கூட்டம், ஷட்டரை பூட்டிவிட்டு, காவலர்களையும், ஊழியர்களையும் ஆயுத முனையில் 30 நிமிடங்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்து, கடையிலிருந்து கோடிக்கணக்கான மதிப்புமிக்க விலையுயர்ந்த பொருள்களை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர்.

CCTV Video

கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் இந்தப் பரபரப்பு காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தக் கொள்ளை தொடர்பாக பேசிய கடை மேலாளர் குமார் மிருத்யுஞ்சய், ``ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் கடைக்குள் புகுந்த உடனே காவல்துறைக்கு தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவர்கள் உரியநேரத்தில் பதிலளிக்கவில்லை. இது முழுக்க முழுக்க அதிகாரிகளின் தவறு. இந்த கொள்ளை இரவு நேரத்திலோ, அதிகாலை நேரத்திலோ நடக்கவில்லை." என்றார்.

இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொள்ளையில் ஈடுபட்டதாக இரண்டு பேரை காவல்துறை கைது செய்து, அவர்களிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள், கொள்ளையடிக்கப்பட்டதில் சில நகைகள், மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி, ``சந்தேகத்திற்குரிய ஆறு நபர்கள் மூன்று மோட்டார் சைக்கிள்களில் அர-பாபுராவிலிருந்து டோரிகஞ்ச் நோக்கிச் செல்வது தெரிந்தது. சிறிது தூரம் துரத்திச் சென்றபோது அவர்கள் காவல்துறையை நோக்கிச் சுட்டனர். காவல்துறை அதிகாரிகளும் எதிர்தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு பேரை அவர்களின் காலில் சுட்டு கைது செய்திருக்கின்றனர். மீதமுள்ளவர்களை விரைவில் கைது செய்வோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

வேளாங்கண்ணி: திருமணம் மீறிய உறவு; கணவரைக் கொன்றுவிட்டு நாடகம்- ஆண் நண்பருடன் மனைவி சிக்கியது எப்படி?

கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனா (22). இவரது காதலி எலன் மேரி (21). இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். தனியார் விடுதியில் அரை எடுத்து தங்கியவர்கள் வ... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தல்; அமெரிக்க FBI தேடிவந்த இந்திய வம்சாவளி... பஞ்சாப்பில் கைதுசெய்த போலீஸ்!

அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் ஷெஹ்னாஸ் சிங். இவர் கொலம்பியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு போதைப்பொருள் கடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 26ம் தேதி அமெரிக்காவி... மேலும் பார்க்க

ஸ்ரேயா கோஷல் கரியர் பற்றி பரவிய நியூஸ்; 'அது பொய்... உஷாராக இருங்கள்!'- மக்களை எச்சரிக்கும் டி.ஜி.பி

சமீபத்தில், 'பாடகி ஸ்ரேயா கோஷலின் கரியர் முடியப்போவதாகவும், அதற்கு காரணம் அவர் மைக் ஆன் ஆகியிருப்பது தெரியாமல் பேசியதும்' என்ற போஸ்ட் மற்றும் நியூஸ் லிங்க் வைரலாகியது. இப்படி பரவிய இந்த நியூஸ் லிங்க் ... மேலும் பார்க்க

5 கொரிய பெண்கள்; Excel Sheet, ரகசிய கேமரா- ஆஸ்திரேலியாவில் பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய வம்சாவளி!

ஆஸ்திரேலியாவில் ஐந்து தென்கொரிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக பிரமுகருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்து வருபவர் பாலேஷ் தன்கர். இந... மேலும் பார்க்க

பள்ளிக் காதலால் சந்தேகம்; மனைவியை சிக்கவைக்க விஷம் குடித்த புது மாப்பிள்ளை பலி - நடந்தது என்ன?

கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும், மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த பிரியா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்பவருக்கும் கடந்த ஜனவரி 25-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலைய... மேலும் பார்க்க

திருப்பதி கோயில் வீடியோ விவகாரம்: TTF வாசனின் வங்கி கணக்கு முடக்கம்

டி.டி.எஃப் வாசன் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. தனது வீடியோக்கள், செயல்கள் ஆகியவற்றால் தொடர்ந்து சர்ச்சையில் மாட்டி வருகிறார் டி.டி.எஃப் வாசன். கடந்த ஆண்டு, ஜூலை மாதம் திருப்பதிக்கு சென்றிருக்கிறார் ... மேலும் பார்க்க