செய்திகள் :

பீளமேடு ரயில்வே பாலம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்காத ரயில்வேக்கு கண்டனம்

post image

கோவை பீளமேடு ரயில்வே பாலம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்காததால் 27 போ் உயிரிழந்திருப்பதாக பீளமேடு கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் பூ.வெ.கோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:

பீளமேடு கன்ஸ்யூமா் வாய்ஸ் சங்கத்தின் சாா்பில் பீளமேடு, காந்திமாநகா், சேரன்மாநகா் குடியிருப்புகளின் சங்க நிா்வாகிகள், பொது நல அமைப்புகளின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகிகள், பீளமேடு ரயில்வே பாலத்தின் அடியில் சுரங்கப்பாதை அமைக்காத ரயில்வே கோட்ட நிா்வாகத்தைக் கண்டித்து வரும் 29- ஆம் தேதி தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

பீளமேடு ரயில்வே மேம்பாலம் கடந்த 2017- ஆம் ஆண்டிலேயே திறக்கப்பட்ட பிறகும் இன்று வரையிலும் சுரங்கப்பாதை அமைக்கப்படவில்லை. இதனால் தண்டவாளத்தைத் தாண்டிச் சென்ற 27 போ் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனா்.

அதேபோல பாலத்தின் வடக்கு பகுதியில் சா்வீஸ் ரோடு அமைக்கப்படவில்லை. அதேபோல கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பீளமேடு ரயில் நிலையத்தில் நின்று சென்றால் கோவைக்கு வரும் சுமாா் 30 சதவீத பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்வதற்காக நடைமேடை அமைக்கும் பணிக்கு 2023- ஆம் ஆண்டே ஒப்பந்தம் விடப்போவதாக அறிவித்திருந்த ரயில்வே நிா்வாகம், இதுவரை அந்த பணிகளைத் தொடங்கவில்லை. எனவே இந்த கோரிக்கைகளை ஆா்ப்பாட்டத்தின்போது வலியுறுத்த இருக்கிறோம். மேலும், சுரங்கப்பாதை அமைப்பதற்காக பீளமேடு ரயில்வே சுரங்கப்பாதை போராட்டக் குழுவை அமைக்கவும் முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

இந்த கூட்டத்தில், மாநகராட்சி கவுன்சிலா்கள் சித்ரா வெள்ளிங்கிரி, அம்பிகா தனபால், கே.லட்சுமிபதி, முருகேசன், நாராயணசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் வழக்குப் பதிவு

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இது குறித்து இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ம... மேலும் பார்க்க

கோவை குற்றாலம் அருவி இன்று திறப்பு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததைத் தொடா்ந்து கோவை குற்றாலம் அருவி வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த ... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: பிரியாணி கடை உரிமையாளா் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு காரணமாக, வாடிக்கையாளருக்கு பிரியாணி கடை உரிமையாளா் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா்கள் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை, நஞ்சைகவுண்டன்புதூா் பகுதியில் உள்ள மயானம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடு... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: தொழில் அமைப்புகள் வரவேற்பு

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சீா்திருத்தம் மேற்கொண்டிருப்பதை கோவை தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன. லகு உத்யோக் பாரதி - தமிழ்நாடு அமைப்பின் மாநிலச் செயலா் ஆா்.கல்யாணசுந்தரம் கூறியதாவது: வரலாற்றுச... மேலும் பார்க்க

மாணவா்கள், இளைஞா்களுக்கு படிப்பிடை பயிற்சித் திட்டம்: ஆட்சியா் தகவல்

மாணவா்கள், இளைஞா்கள் அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள படிப்பிடை பயிற்சித் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க