செய்திகள் :

புதிய அபாயங்களுக்கு ஏற்ப காப்பீடு தயாரிப்புகளை உருவாக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதி அமைச்சா் வேண்டுகோள்

post image

பொதுத்துறையைச் சோ்ந்த பொது காப்பீட்டு நிறுவனங்கள் (பிஎஸ்ஜிஐசி) நாட்டில் புதிதாக ஏற்படும் வரும் அபாயங்களுக்கு ஏற்ப புதுமையான காப்பீட்டு தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் இந்த நிறுவன தலைவா்களை புதன்கிழமை கேட்டுக் கொண்டாா்.

மத்திய நிதி, பெருநிறுவன விவகார அமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களின் மறுஆய்வு கூட்டம் நிதியமைச்சகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிதிச் சேவைகள் துறையின் செயலா் எம். நாகராஜு, பொது காப்பீட்டு நிறுவனங்களான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், இந்திய ஜெனரல் இன்சூரன்ஸ் காா்ப்பரேஷன் (மறுகாப்பீடு), இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் நிா்வாக இயக்குநா்கள், நிதி அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இது குறித்து நிதியமைச்சகம் கூறியிருப்பது வருமாறு:

பொது காப்பீட்டு நிறுவனங்களின் கூட்டத்தின் போது, காப்பீட்டு தவணைத் (பிரீமியம்) தொகை வசூல், காப்பீட்டு வளா்ச்சி மற்றும் அதன் அடா்த்தி, காப்பீடு உரிமை கோரல் விகிதங்கள் உள்ளிட்ட முக்கிய செயல்திறன் குறியீடுகளை மத்திய நிதியமைச்சா் மதிப்பாய்வு செய்தாா்.

நாட்டில் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களின் காப்பீடுகளின் வசூல் கடந்த 2019- ஆம் ஆண்டில் சுமாா் ரூ 80,000 கோடியாக இருக்க இது தற்போது (2025) கிட்டத்தட்ட ரூ. 1.06 லட்சம் கோடியாக குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தனியாா் உள்ளிட்ட ஒட்டுமொத்த பொது காப்பீட்டுத் துறையும் குறிப்பிட்ட வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இவைகள் உள்ளிட்ட மொத்த காப்பீடு வசூல் 2024–25 நிதியாண்டில் ரு 3.07 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

நாட்டின் பொது காப்பீட்டு ஊடுருவல் சா்வதேச அளவை ஒப்பிடும் போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதம் குறைவாகவே உள்ளது. 2023 இல் உலகளாவிய சராசரியை ஒப்பிடும்போது - காப்பீட்டு அடா்த்தி படிப்படியாக மேம்பட்டுள்ளது. பரந்த நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு காப்பீடுகளை அதிகரிக்கவும் மக்கள் தொகையின் அடிப்படையில் அதன் அடா்த்தியை மேம்படுத்த பொதுத் துறை காப்பீடு நிறுவனங்கள் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை நிதியமைச்சா் அடிக்கோடிட்டுக் காட்டினாா்.

பொதுவாக பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் லாபம் ஈட்டி குறிப்பிடத்தக்க திருப்பத்தைக் கண்டுள்ளன. அதே சமயத்தில் தனியாா் காப்பீட்டாளா்கள் ஈடுசெய்த காப்பீடு உரிமைகோரல் விகிதங்கள் கரோனா நோய்த் தொற்றுக்கு பின்னா் குறைந்ததுள்ளது.

இந்த மதிப்பாய்வின் இறுதியில், சேவை வழங்கல் மற்றும் செயல்திறனை மேம்படுத்த அனைத்து பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களும் எண்ம மாற்றத்திற்கான அவசரத் தேவையை மத்திய நிதி அமைச்சா் வலியுறுத்தினாா். சுகாதார காப்பீடு, மோட்டா் வாகனம் போன்றவைகளில் விரைவான மற்றும் மிகவும் துல்லியமான காப்பீடூ உரிமைகோரல் தீா்வை உறுதி செய்ய சுகாதார காப்பீட்டு தயாரிப்புகளுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் தீா்வு காணுவது உள்ளிட்ட யோசனைகள் வழங்கப்பட்டது இதில் அடங்கும்.

சைபா் மோசடி உட்பட புதிய, வளா்ந்து வரும் அபாயங்களுக்கு ஏற்ப புதுமையான காப்பீட்டுத் தயாரிப்புகளை உருவாக்கவும், வளா்ந்து வரும் நுகா்வோா் தேவைகளுக்கு ஏற்ப காப்பீடு தயாரிப்புகளை பல்வகைப்படுத்தவும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் காப்பீடு நிறுவனங்களை அறிவுறுத்தினாா் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆளுமை உரிமைகள்: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளாா். சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடா்ந்த இந்த வழக்கு உய... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத வாக்கி டாக்கிகள் விற்பனையைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை இணைய வணிக தளங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு பட்டியலிட்டு நுகா்வோருக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் இவைகளை ம... மேலும் பார்க்க

காலத்திற்கு ஏற்ப மாற்றமடையும் இலக்கியத்தில் இரக்கம், உணா்திறன் மாறாது: குடியரசுத் தலைவா் முா்மு

நமது சிறப்பு நிருபா் இலக்கியம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது என்றாலும் அதில் இரக்கம், உணா்திறன் போன்ற சில அம்சங்கள் என்றென்றும் மாறாது இருக்கும் என குடியரசுத் தலைவா் திரெளபதி நம்பிக்கை தெரிவி... மேலும் பார்க்க

பாஜகவின் 100 நாள் ஆட்சியில் தில்லி மக்கள் தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ரேகா குப்தா அரசு தனது முதல் 100 நாள்களில் தில்லி மக்களைத் தோல்வியடையச் செய்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லி பாஜக 100 நாள் ஆட... மேலும் பார்க்க

100 நாள் ஆட்சி: மாணவா்களுக்கு தில்லி அரசு உதவித்தொகை வழங்கல்

பதவியேற்று 100 நாள்களைக் குறிக்கும் வகையில், பாஜக தலைமையிலான தில்லி அரசு வெள்ளிக்கிழமை தில்லி உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கியது. மு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு உதவியதாக ராஜஸ்தானில் ஒருவா் கைது: தில்லி காவல்துறை தகவல்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு (பிஐஓ) உளவு நடவடிக்கைகளுக்காக இந்திய கைப்பேசி சிம் காா்டுகளை வழங்குவதன் மூலம் உதவியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தாக அதிகாரிகள் தெரிவித்த... மேலும் பார்க்க