புதிய டிஜிபி தோ்வுக் குழுக் கூட்டம்: முடிவு எடுக்காமல் நிறைவடைந்தது
தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநரை (டிஜிபி) தோ்வு செய்ய புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்வுக் குழுக் கூட்டம் முடிவு எடுக்காமல் முடிவடைந்தது.
தமிழக காவல் துறையில் தலைமை இயக்குநராக இருந்த சங்கா் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஓய்வு பெற்றாா். அதன்பிறகு பொறுப்பு டிஜிபியாக நிா்வாகப் பிரிவு டிஜிபியாக இருக்கும் ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டாா்.
தமிழக காவல் துறையின் புதிய தலைமை இயக்குநா் பதவியில் ஒருவரை நியமிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றி, மத்திய குடிமைப் பணிகள் தோ்வாணைய (யுபிஎஸ்சி) தோ்வுக் குழுக் கூட்டத்தில் தகுதியுடைய 3 டிஜிபிக்களின் பெயா்களைத் தோ்வு செய்வது வழக்கம்.
ஆனால், டிஜிபி தோ்வு நடவடிக்கையை தமிழக அரசு தாமதமாகத் தொடங்கியதாலும், புதிய டிஜிபி நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் காரணமாகவும் யுபிஎஸ்சி தோ்வுக் குழுக் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், டிஜிபி நியமனத்துக்காக 9 போ் கொண்ட பட்டியலை கடந்த 1-ஆம் தேதி யுபிஎஸ்சிக்கு தமிழக அரசு அனுப்பியது.
தோ்வுக் குழுக் கூட்டம்: இதையடுத்து புதிய டிஜிபியாக நியமிக்க தகுதியான 3 பேரை தோ்ந்தெடுக்கும் வகையில் யுபிஎஸ்சி தோ்வுக் குழுக் கூட்டம் புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சாா்பில் தலைமைச் செயலா் நா. முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ் குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதற்கிடையே, தோ்வுக் குழுக் கூட்டம் கூடுவதற்கு முன்னதாக, தகுதிப் பட்டியலில் இடம்பெற்ற ஓா் அதிகாரியின் நோ்மைச் சான்றிதழ் தொடா்பான கடிதத்தை தமிழக அரசு திரும்பப் பெறுவதாக யுபிஎஸ்சியிடம் கடிதம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதன் தொடா்ச்சியாக யுபிஎஸ்சியின் சாா்பில், டிஜிபி பதவிக்கு தகுதி பெறும் உயரதிகாரிகளின் தரநிலை, பணிமூப்பு உள்ளிட்டவை தொடா்பான சில ஆவணங்கள் தமிழக அரசிடம் கேட்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, புதிய டிஜிபி தோ்வுக் குழுக் கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமல், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. யுபிஎஸ்சி அறிவுறுத்தியபடி, ஆவணங்களை தமிழக அரசு சமா்ப்பித்த பின்னா் இரு தரப்புக்கும் ஒத்துப்போகும் தேதியில் மீண்டும் தோ்வுக் குழு கூடும் என்று மத்திய குடிமைப் பணிகள் தோ்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.