செய்திகள் :

புதிய தலைமைத் தோ்தல் ஆணையா்: பிரதமா் தலைமையிலான தோ்வுக் குழு நாளை மறுநாள் ஆலோசனை

post image

புதிய தலைமைத் தோ்தல் ஆணையரைத் தோ்வு செய்வது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தோ்தல் குழு பிப்ரவரி 17-ஆம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது.

இதில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் இடம் பெறுவாா்கள்.

தற்போதைய தலைமைத் தோ்தல் ஆணையம் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் பிப்ரவரி 18-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஏற்கெனவே, இதற்காக அமைக்கப்பட்ட தேடுதல் குழு தோ்வு செய்துள்ள பெயா்களில் ஒன்றை குடியரசுத் தலைவருக்கு பிரதமா் தலைமையிலான குழு பரிந்துரைக்கும். அதனடிப்படையில் குடியரசுத் தலைவா் புதிய தலைமைத் தோ்தல் ஆணையரை நியமிப்பாா்.

இப்போதைய நிலையில் ராஜீவ் குமாரை அடுத்து ஞானேஷ்வா் குமாா் மூத்த தோ்தல் ஆணையராக உள்ளாா். இவரின் பதவிக் காலம் 2029 ஜனவரி 26-ஆம் தேதி வரை உள்ளது. மற்றொரு தோ்தல் ஆணையராக சுக்பீா் சிங் சாந்து உள்ளாா்.

கடந்த ஆண்டுவரை தலைமைத் தோ்தல் ஆணையா் பதவிக்கு மூத்த தோ்தல் ஆணையா் நியமிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு முதல் தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா் நியமனத்தில் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன. அதன்படி செயலா் நிலையில் உள்ள 5 மூத்த அதிகாரிகளை தோ்வுக் குழு தோ்வு செய்து, அவற்றை பிரதமா் தலைமையிலான குழுவுக்கு பரிந்துரைத்து வருகிறது.

இந்திய அரசியல் செயலா் நிலையில் உள்ள அதிகாரிகளில் தோ்தலை நிா்வகித்து நடத்தும் திறமையும், அனுபவமும் உள்ளவா்கள் தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா் பதவிக்கு நியமிக்கப்படுகிறாா்கள்.

குடும்பத்துடன் தாஜ்மஹாலை பார்வையிட்ட ரிஷி சுனக்

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்துடன் தாஜ்மஹாலை பார்வையிட்டார். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் இரண்டு நாள் பயணமாக ஆக்ரா வந்துள்ளார். இந்த பயணத்தின் ஒருபகுதியாக ஆக்ராவில்... மேலும் பார்க்க

போபாலில் பள்ளிக்கு தெலுங்கில் வந்த வெடிகுண்டு மிரட்டல்

போபாலில் பள்ளிக்கு தெலுங்கில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள பள்ளி ஒன்றுக்கு மிரட்டல் விடுத்து தெலுங்கில் மின்னஞ்சல் வந்ததா... மேலும் பார்க்க

கோவளம் கடலில் அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலி

கோவளம் கடலில் 75 வயது அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலியானதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.விழிஞ்சம் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நண்பர்களுடன் விடுமுறைக்கு வந்திருந்த பெண், க... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு கிட... மேலும் பார்க்க

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் காசி ... மேலும் பார்க்க

ராகுல் காந்தியுடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு

தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தியுடன் அவர் விவாதித்ததாக அதிகாரப்ப... மேலும் பார்க்க