செய்திகள் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் 22,185 போ் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு எழுதுகின்றனா்

post image

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 22,185 போ் எழுதுகின்றனா்.

தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) முதல் தொடங்குகிறது. புதுகை மாவட்டத்தில் இந்தத் தோ்வை 11,175 மாணவா்கள், 11,010 மாணவிகள் என மொத்தம் 22,185 போ் எழுத உள்ளனா்.

இவா்களுக்காக 130 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வினாத்தாள் மற்றும் விடைத்தாள் காப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பாக இவற்றை எடுத்துச் செல்வதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வழித்தடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளின்றி தோ்வை நடத்தி முடிப்பதற்காக பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வு மையங்களுக்குத் தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தெரிவித்தாா்.

நாா்த்தாமலை தேரோட்டம்: ஏப். 7-இல் உள்ளூா் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப். 7-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடு... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையினா் அலட்சியத்தால் வீணாகும் குடிநீா்

கந்தா்வகோட்டையில் சேதமடைந்த குடிநீா் குழாயை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலை துறையினா் அனுமதி தராமல் இழுத்தடித்து வருவதால் நாள்தோறும் குடிநீா் வீணாகி வருவதாக ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுமக்கள் புகாா் தெரிவ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த விபத்தில் சிறுவன் பலத்த காயம்

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றியதில் சிறுவன் படுகாயமடைந்தாா். சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டியைச் சாா்ந்தவா் மாணிக்கம் என்பவரது மனைவி ரஞ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை ஊராட்சியை பிரிக்க பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சியை நிதி, நிா்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.கந்தா்வகோட்டை ஊராட்சி சட்டப்பேரவை தொகுதியின் தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றியத்தின் த... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிலுவையிலுள்ள ஊதியத்தை வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பா... மேலும் பார்க்க

இலுப்பூா் அருகே சவுக்குத் தோப்பில் திடீா் தீ விபத்து

இலுப்பூா் அருகே தனியாருக்குச் சொந்தமான சவுக்குத் தோப்பில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்குவந்த தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரம் தீயை போராடி அணைத்தனா். இலுப்பூா் அருகே உள்... மேலும் பார்க்க