செய்திகள் :

புதுச்சேரியில் இன்று 12 மையங்களில் நீட் தோ்வு

post image

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை 12 மையங்களில் நீட் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் இளநிலை மருத்துவக் கல்வி (எம்.பி.பி.எஸ்.) உள்ளிட்ட படிப்புகளில் சேர மத்திய அரசால் நீட் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாடெங்கும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரையில் நீட் தோ்வு நடைபெறுகிறது.

தேசிய அளவில் 550 நகரங்களில் 23 லட்சம் போ் தோ்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா். புதுவை மாநிலத்தில் நீட் தோ்வை 5,230 போ் எழுத அனுமதிக்கப்படுகின்றனா். அவா்களுக்கு 12 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீட் தோ்வுக்காக புதுச்சேரியில் 8 மையங்கள், காரைக்காலில் 2, மாஹே, ஏனாமில் தலா ஒரு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இலாசுப்பேட்டை தாகூா் அரசு கல்லூரி, அங்குள்ள அரசு மகளிா் பொறியியல் கல்லூரி, முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி, சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி, திருவள்ளுவா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வில்லியனூா் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நீட் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீட் தோ்வு மையங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து இடங்களுக்கும் தலா ரூ.10 கட்டணம் செலுத்தி பேருந்துகளில் பயணிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தோ்வு மைய வளாகத்துக்குள் முற்பகல் 11.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை மட்டுமே தோ்வா்கள் அனுமதிக்கப்படுவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுச்சேரி விமான நிலையப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரி இலாசுப்பேட்டை விமான நிலையப் பகுதியில் புதன்கிழமை மாலை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பே... மேலும் பார்க்க

புதுவையில் உலகத் தரத்தில் கைவினை, கிராமத் தொழில் பயிற்சி மையம்: துணைநிலை ஆளுநா் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு

உலகத் தரத்தில் புதுச்சேரியில் கைவினை மற்றும் கிராமத் தொழில் பயிற்சி மையம் அமைப்பது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் கைவினை மற்றும் ... மேலும் பார்க்க

ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் பாராட்டு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்தாா். இதுக... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்: புதுவை தொழிலாளா் துறை

புதுவை மாநிலத்தில் உள்ள தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி இயக்குநா் சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி ப... மேலும் பார்க்க

புதுவையில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை: அதிகாரிகளுடன் ஆளுநா் ஆலோசனை

புதுவை மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல் துறை செயல்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், தலைமைச் செயலா், காவல் துறை உயா் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். புதுச்சேரி ராஜ்... மேலும் பார்க்க

மே 20 வேலை நிறுத்தத்துக்கு இண்டி கூட்டணி ஆதரவு: காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம்

புதுவையில் மே 20 இல் தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இண்டி கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிப்பதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரி முதலியாா் பேட்ட... மேலும் பார்க்க