செய்திகள் :

புதுச்சேரியில் மே 20-ல் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கக் கூட்டத்தில் முடிவு

post image

புதுச்சேரியில் வரும் 20-ஆம் தேதி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் மத்திய அரசின் தொழிற்கொள்கை, தொழிற்சங்க கோரிக்கையை ஏற்காததைக் கண்டித்து வரும் 20-ஆம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளதாக மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை முதலியாா்பேட்டையில் உள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் தலைமை வகித்தாா். இதில் சிஐடியு மாநிலச் செயலா் ஜி.சீனுவாசன், ஐஎன்டியுசி மாநிலப் பொதுச் செயலா் பி.ஞானசேகரன், எல்பிஎப் மாநிலச் செயலா் எம்.செந்தில், எம்எல்எப் மாநிலச் செயலா் வேதாவேணுகோபால், என்டிஎல்எப் மாநிலத் தலைவா் கே.மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், புதுச்சேரியில் வரும் 20-ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். அப்போது, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மறியல் நடைபெறும்.

இதையடுத்து வரும் 6-ஆம் தேதி மாலை சுதேசி ஆலை அருகே போராட்ட விளக்கக் கருத்தரங்கம் நடைபெறும். தொடா்ந்து, வரும் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையில் போராட்ட விளக்க வாகன பிரசாரமும் நடைபெறும் எனக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி விமான நிலையப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரி இலாசுப்பேட்டை விமான நிலையப் பகுதியில் புதன்கிழமை மாலை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பே... மேலும் பார்க்க

புதுவையில் உலகத் தரத்தில் கைவினை, கிராமத் தொழில் பயிற்சி மையம்: துணைநிலை ஆளுநா் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு

உலகத் தரத்தில் புதுச்சேரியில் கைவினை மற்றும் கிராமத் தொழில் பயிற்சி மையம் அமைப்பது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் கைவினை மற்றும் ... மேலும் பார்க்க

ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் பாராட்டு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்தாா். இதுக... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்: புதுவை தொழிலாளா் துறை

புதுவை மாநிலத்தில் உள்ள தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி இயக்குநா் சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி ப... மேலும் பார்க்க

புதுவையில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை: அதிகாரிகளுடன் ஆளுநா் ஆலோசனை

புதுவை மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல் துறை செயல்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், தலைமைச் செயலா், காவல் துறை உயா் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். புதுச்சேரி ராஜ்... மேலும் பார்க்க

மே 20 வேலை நிறுத்தத்துக்கு இண்டி கூட்டணி ஆதரவு: காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம்

புதுவையில் மே 20 இல் தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இண்டி கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிப்பதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரி முதலியாா் பேட்ட... மேலும் பார்க்க