செய்திகள் :

புதுச்சேரி: `என் அக்கா குளிக்கறதை எட்டிப் பாக்குறியா ?’ - இளைஞரை கொலை செய்த பெண்ணின் சகோதரர்

post image

புதுச்சேரி, பாகூர் அடுத்த பனையடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுரு. சில நாள்களுக்கு முன் தன்னுடைய எதிர்வீட்டில் இருக்கும் பெண் குளிக்கும்போது, மாடியில் இருந்து இவர் எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து அந்தப் பெண் தன்னுடைய கணவரிடம் அதுகுறித்துக் கூறியிருக்கிறார்.

அதுகுறித்துக் கேட்கச் சென்றபோது அவருக்கும், ராஜகுருவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வாக்குவாதம் குறித்து தன்னுடைய மனைவியின் தம்பி தினேஷ்பாபுவிடம் கூறியிருக்கிறார் பெண்ணின் கணவர். இந்த நிலையில்தான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தன்னுடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு ராஜகுருவிடம் சென்றார் தினேஷ்பாபு.

அன்றைய தினம் பனையடிக்குப்பத்தில் நண்பர் ஒருவரின் மீன் குட்டை கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்த ராஜகுருவை எழுப்பி தினேஷ்குமார், `என் அக்கா குளிக்கறதை எட்டிப் பாக்குறியா… என்று கேட்டு இரும்புத் தடியால் தாக்கியிருக்கிறார்.

கொலை
கொலை

தொடர்ந்து அவருடன் வந்த நண்பர்களுன் ராஜகுருவை இரும்பு மற்றும் பிளாஸ்டிக் தடியால் தாக்கிவிட்டு தப்பியோடினர். அதில் பலத்த காயமடைந்த ராஜகுருவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த ராஜகுரு, சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அதையடுத்து பெண்ணின் தம்பி தினேஷ்பாபு மற்றும் அவரது நண்பர்கள் சர்மா, முகிலன், சுமித், அச்சுதன் உள்ளிட்டவர்களை கொலை வழக்கில் போலீஸார் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட ராஜகுருவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

வேலூர்: திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; கணவன் வெட்டிக்கொலை; இளைஞனுடன் சிக்கிய மனைவி - நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலுள்ள குப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மகன் பாரத் (36). கேட்டரிங் படித்துள்ள பாரத் தாம்பரம் பகுதியிலிருக்கும் ஒரு தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்ட... மேலும் பார்க்க

சைபர் கிரைமில் ரூ.2 கோடி பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர்; கோவா, காஷ்மீரில் காதலியுடன் உல்லாச பயணம்..

நாடு முழுவதும் சைபர் கிரிமினல்கள் பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துவிடுவோம் என்று கூறி மிரட்டி அடிக்கடி பணத்தை பறித்து வருகின்றனர். இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் இக்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் வழக்கில் ட்விஸ்ட்: ’நடந்தத நான் சொல்றேன்’ – அப்ரூவராக மாறும் மாஜி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்

சாத்தான்குளத்தில் காவல்துறை சித்திரவதையால் தந்தை-மகன் மரணமடைந்த வழக்கில் அப்ரூவராக மாற உள்ளதாக சிறையில உள்ள முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கைதா... மேலும் பார்க்க

`உன்னைக் கொன்று பொட்டலமாக அனுப்பி வைப்போம்’ - மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்ட மனைவி; எஸ்.ஐ மகன் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகிலுள்ள மேல்நெல்லி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் நர்கீஸ். பி.எஸ்.சி பட்டதாரியான நர்கீஸிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவுக்குஉட்பட்ட சோழவரம் கி... மேலும் பார்க்க

``அதிக சொத்து யாருக்கு?'' - தந்தையின் இறுதிச்சடங்கை நடத்தவிடாமல் 4 சகோதரர்கள் அடிதடி..

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள சரஸ்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜலுபாய் (78) நேற்று முன் தினம் இறந்து போனார். அவருக்கு மொத்தம் 7 பிள்ளைகள். அதில் 2 பேர் இறந்துவிட்ட நிலையில் 4 மகன்களும், ஒரு ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பிரிந்து சென்ற மனைவி மீது சந்தேகம்; கூலிப்படை வைத்து கொன்ற கணவன்; சாயல்குடியில் கொடூரம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெர்மின் (34). இவருக்கும் எல்லை பாதுகாப்புப் படை வீரரான விஜய கோபால் என்பவருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு ... மேலும் பார்க்க