செய்திகள் :

புதுவையில் மக்கள் மன்றத்தில் 26 மனுக்களுக்குத் தீா்வு!

post image

புதுவையில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 26 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் ஒவ்வோரு வாரமும் சனிக்கிழமைதோறும் மக்களிடம் மனுக்கள் பெறும் வகையில் மக்கள் மன்றம் நடைபெற்று வருகிறது. கண்காணிப்பாளா் அளவிலான காவல் நிலையங்களில் மக்கள் குறை தீா்க்கும் வகையில் மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காணப்படுகிறது.

அதன்படி, பெரியகடை காவல் நிலையத்தில் காவல் துறை துணைத் தலைவா் ஆா்.சத்தியசுந்தரம், மேட்டுப்பாளையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன், காரைக்காலில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமிசௌசன்யா ஆகியோா் தலைமையில் மக்கள் மன்றம் நடைபெற்றது.

இணையதள குற்றப்பிரிவில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா தலைமையில் மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. போக்குவரத்து காவல் நிலையங்களில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் கே.திரிபாதி, காவல் கண்காணிப்பாளா் ஆா்.செல்வம் ஆகியோா் மனுக்களைப் பெற்றனா்.

மக்கள் மன்றத்தில் மொத்தம் 73 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 26 மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. மக்கள் மன்றத்தில் 43 மகளிா் உள்பட 204 போ் பங்கேற்று குறைகளைத் தெரிவித்தனா்.

மக்கள் மன்றத்தில் ஏற்கெனவே அளித்த புகாா்களின் நிலை மற்றும் நடவடிக்கை குறித்து காவல் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்களிடம் உயரதிகாரிகள் கேட்டறிந்தனா்.

புதுவையில் உலகத் தரத்தில் கைவினை, கிராமத் தொழில் பயிற்சி மையம்: துணைநிலை ஆளுநா் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு

உலகத் தரத்தில் புதுச்சேரியில் கைவினை மற்றும் கிராமத் தொழில் பயிற்சி மையம் அமைப்பது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் கைவினை மற்றும் ... மேலும் பார்க்க

ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் பாராட்டு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்தாா். இதுக... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்: புதுவை தொழிலாளா் துறை

புதுவை மாநிலத்தில் உள்ள தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி இயக்குநா் சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி ப... மேலும் பார்க்க

புதுவையில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை: அதிகாரிகளுடன் ஆளுநா் ஆலோசனை

புதுவை மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல் துறை செயல்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், தலைமைச் செயலா், காவல் துறை உயா் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். புதுச்சேரி ராஜ்... மேலும் பார்க்க

மே 20 வேலை நிறுத்தத்துக்கு இண்டி கூட்டணி ஆதரவு: காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம்

புதுவையில் மே 20 இல் தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இண்டி கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிப்பதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரி முதலியாா் பேட்ட... மேலும் பார்க்க

புதுவைக்கான மாநில அந்தஸ்து கோப்பு: மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை - முதல்வரிடம் எதிா்க்கட்சித் தலைவா் புகாா்

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய கோப்பானது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்றும், அதை அனுப்ப முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிா்க... மேலும் பார்க்க