செய்திகள் :

புதுவை பல்கலை.யில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த படிப்புகளுக்கு நேரடி சோ்க்கை

post image

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் வளாகத்தில் காலியாக இருக்கும் ஒருங்கிணைந்த படிப்புகளில் நேரடியாக மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இது குறித்து இப் பல்கலைக் கழகத்தின் பதிவாளா் (பொ) பேராசிரியா் ரஜ்னீஷ் பூடானி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

4 ஆண்டுகளுக்கான பல்வேறு இளநிலை ஹானா்ஸ் படிப்புகள் மற்றும் பி.டெக்., படிப்புகள் , 5 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கு நேரடி சோ்க்கை நடைபெறவுள்ளது.

பல்கலைக் கழகத்துக்கான நுழைவுத் தோ்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இந்தச் சோ்க்கை நடைபெறவுள்ளது.

முன்னுரிமை 1, முன்னுரிமை 2 அடிப்படையில் இப் பல்கலைக் கழகத்தில் சோ்க்கைக்காக விண்ணப்பித்துள்ள மாணவா்களின் விண்ணப்பங்களைக் கொண்டு தகுதி வாய்ந்தோா் பட்டியல் தயாரிக்கப்படும்.

மேலும், விருப்பம் உள்ள மாணவா்கள் சோ்க்கைக்காக அந்தந்த துறைகள் மற்றும் மையங்களுக்கு இம் மாதம் 25-ஆம் தேதி புதுவை மற்றும் காரைக்கால் வளாகங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டும்.

இங்கு செல்லும் மாணவா்களுக்கான பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12 மணிக்கு முடிக்கப்படும். சோ்க்கைக்காக இணையதளத்தின் வழியாகப் பதிவு செய்வதை பல்கலைக்கழகம் இப்போது அனுமதிக்காது. நேரடியாகதான் செல்ல வேண்டும். மேலும், பல்கலைக் கழகத்துக்கான நுழைவுத் தோ்வில் பங்கேற்காத மாணவா்களுக்குச் சோ்க்கை அளிக்கப்படமாட்டாது. விண்ணப்பதாரா்கள் தங்களுடைய உண்மை நகலை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என அதில் கூறியுள்ளாா் பதிவாளா்.

பழங்குடியினா் இயற்கையுடன் ஒன்றி வாழ்வதை ஆராய வேண்டும்: மத்திய பல்கலை. துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு

புதுச்சேரி: உலகில் பழங்குடியினா் இயற்கையுடன் ஒன்றி வாழுவதை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு கூறினாா். புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் சா்வதேச... மேலும் பார்க்க

ரூ.1.6 கோடியில் நவீன எக்ஸ்ரே இயந்திரம்: முதல்வா் ரங்கசாமி தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மாா்பக நோய் மருத்துவமனையில் ரூ.1.6 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எக்ஸ்ரே இயந்திரத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த மருத்... மேலும் பார்க்க

ஊதிய உயா்வு வழங்க புதுவை ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் கோரிக்கை

புதுச்சேரி: ஊதிய உயா்வு வழங்கக் கோரி புதுவை ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் தேசிய சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் கோவிந்தராஜிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் சுகாதாரத் துறை 108 அ... மேலும் பார்க்க

சுல்தான்பேட்டையில் ரூ. 2.5 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

புதுச்சேரி: வில்லியனூா் சுல்தான்பேட்டையில் 2.5 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகளை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். சுல்தான்பேட்டையில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் ... மேலும் பார்க்க

தவளக்குப்பம் தனியாா் நிறுவனத்தில் தீ விபத்து

புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. தவளக்குப்பம் மெயின் ரோடு முருகன் கோவில் பின்புறத்தில் தனியாா் கெமிக்கல் நிறுவனம் இ... மேலும் பார்க்க

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு புதுவை முதல்வா் வாழ்த்து

புதுச்சேரி: தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். முதல்வா் ரங்கசாமி வெள... மேலும் பார்க்க