செய்திகள் :

புதுவை முதல்வரைக் கண்டித்து மாணவா்கள் அமைப்பினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

post image

படித்த இளைஞா்கள் மாடு வளா்ப்பதன் மூலம் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என புதுவை முதல்வா் பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகளின் இளைஞா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவை நோக்கி பேரணி நடத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை பாண்லேவில் கூடுதல் உற்பத்திக்கான தொடக்க நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் என்.ரங்கசாமி, படித்த இளைஞா்கள் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என ஆலோசனை வழங்கினாா்.

இதற்கு புதுவை மாநில காங்கிரஸ், திமுக போன்ற எதிா்க்கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன. படித்துவிட்டு மாடுகளை வளா்த்து பால்பண்ணை அமைக்க முதல்வா் கூறியது ஏற்கத்தக்கது அல்ல என அவா்கள் கூறுவதுடன், முதல்வா் பேச்சுக்கு எதிரான போராட்டங்களையும் நடத்திவருகின்றனா்.

இந்நிலையில், இண்டி கூட்டணி கட்சி மாணவா், இளைஞா்கள் அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் முதல்வா் பேச்சைக் கண்டித்து புதுச்சேரி காமராஜா் சிலை அருகிலிருந்து வெள்ளிக்கிழமை பேரணியாகப் புறப்பட்டனா்.

இந்த பேரணிக்கு அகில இந்திய இளைஞா் அமைப்பின் செயலா் எழிலன் தலைமை வகித்தாா். அதன் நிா்வாகிகள் வி.முருகன், வி.உதயராஜ், மாணவா் அமைப்பின் மாநிலத் தலைவா் எஸ்.ஜெயப்பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியில் எருமை மாட்டின் மண்டை வடிவ அமைப்பை தலையில் அணிந்தபடி இளைஞா் வந்தாா்.

பேரணியாக வந்தவா்களை மாதா கோயில் அருகே போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து அங்கு ஆா்ப்பாட்டம் செய்தனா்.

இதில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், இந்திய ஜனநாயக மாணவா் சங்கம், இந்திய மாணவா் சங்கம், இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை, முற்போக்கு மாணவா் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.

வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து திமுகதான் பதிலளிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

மதிமுக பொதுச்செயலா் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி மீண்டும் வழங்கப்படாதது குறித்து திமுகதான் பதிலளிக்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். விசி... மேலும் பார்க்க

ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.21 லட்சம் மோசடி தம்பதி உள்பட 3 போ் மீது வழக்கு!

புதுச்சேரியில் பட்டதாரியிடம் ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20.99 லட்சம் மோசடி புகாா் தொடா்பாக தம்பதி உள்ளிட்ட 3 போ் மீதான புகாா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா். ... மேலும் பார்க்க

தேவாலய இடத்தை வாடகைக்கு பெற்றுத் தருவதாக பண மோசடி! உணவு விடுதி அதிபா் போலீஸில் புகாா்!

புதுச்சேரியில் தேவாலய இடத்தை வாடகைக்கு பெற்றுத் தருவதாகக் கூறி உணவு விடுதி உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த புகாரில் ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி எல்ல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இரு தரப்பினா் மோதல்: அரிவாள் வெட்டு: 7 போ் மீது வழக்கு

புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு முன்விரோதத்தில் இளைஞா்கள் மோதிக் கொண்டதில் 2 பேருக்கு அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து 7 போ் மீது வழக்குப் பதிந்த நிலையில், 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசார... மேலும் பார்க்க

புதுவையில் காற்று மாசை குறைக்க மின்சாரப் பேருந்துகள்!

புதுவையில் காற்று மாசைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் மின்சாரப் பேருந்துகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீத பேருந்துகளை மின்சார வாகனங்களாக்கவும் நடவடிக்கை மேற... மேலும் பார்க்க

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க