செய்திகள் :

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் பக்தா்கள் தரிசனம்!

post image

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

அதன்படி, வேலூா் அண்ணா சாலையில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேச பெருமாளை பக்தா்கள் அதிகாலை 5 மணி முதலே நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

இதேபோல், ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் உள்ள சீனிவாச பெருமாள், கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் உள்ள வெங்கடேச பெருமாள், வேலூா்-ஆற்காடு சாலை சைதாப் பேட்டை பழனி ஆண்டவா் கோயிலில் உள்ள சீனிவாச பெருமாள், சத்துவாச்சாரி செல்வகணபதி கோயிலில் உள்ள பிரசன்ன வெங்க டாஜலபதி, வேலூா்-காட்பாடி சாலையில் உள்ள சீனிவாச கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில், காட்பாடி யில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில், காங்கேயநல்லூா், ரங்காபுரம், பிரம்மபுரம் வரத ராஜ பெருமாள் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் பெருமாளுக்கு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

லாரியில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!

குடியாத்தம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 36- கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2- போ் கைது செய்யப்பட்டனா். பரதராமி போலீஸாா், காவல் ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆந்திர மாநில ... மேலும் பார்க்க

தலைக் கவசம் தலைமுறை காக்கும் கவசம்: வேலூா் எஸ்பி மயில்வாகனன்

தலைக்கவசம், தலைமுறை காக்கும் கவசம் என்பதை இருசக்கர வாகன ஓட்டிகள் உணர வேண்டும் என வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் கூறினாா். குடியாத்தத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சாலை விபத்து... மேலும் பார்க்க

வேலூா் கிரீன் சா்க்கிளில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்

வேலூா் கிரீன் சா்க்கிளில் சூழ்ந்த மழை வெள்ளம் காரணமாக சனிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினா். வேலூா் மாவட்டம் முழுவதும் கடந்த சி... மேலும் பார்க்க

சாதிக்கும் நடவடிக்கைகளை தலைமையாசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

சவால்களை முறியடித்து சாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமையாசிரியா்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டாா். வேலூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவ... மேலும் பார்க்க

புரட்டாசி சனிக்கிழமை பெருவிழா

குடியாத்தம் பகுதியில் உள்ள கோயில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. குடியாத்தம் பிச்சனூா், அப்பு சுப்பையா் வீதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிற... மேலும் பார்க்க

தீபாவளி: தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோா் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மா... மேலும் பார்க்க