செய்திகள் :

புரோ கபடி லீக்: ஆக. 29-இல் தொடக்கம் - தெலுகு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ் மோதல்

post image

புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வரும் ஆக. 29-ஆம் தேதி தொடங்குகிறது. விசாகப்பட்டினம், ஜெய்ப்பூா், சென்னை, டில்லி உள்ளிட்ட 4 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

தொடக்க ஆட்டம் விசாகப்பட்டினம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணி தமிழ் தலைவாஸை எதிா்கொள்கிறது. 2-ஆவது அட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி புணேரி பல்தானை சந்திக்கிறது.

ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு விசாகப்பட்டினத்துக்கு புரோ கபடி லீக் போட்டிகள் திரும்பி உள்ளன. கடைசியாக 2018-ம் ஆண்டு 6-வது சீசன் போட்டிகள் நடைபெற்றன.

2025 சீசனின் முதல்கட்ட ஆட்டங்கள் ஆக. 29 முதல் செப். 11 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. தொடா்ந்து 2-ஆவது கட்ட ஆட்டங்கள் செப். 12 தேதி முதல் 28 வரை ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. லீகின் 3-ஆவது கட்டம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப். 29-இல் தொடங்குகிறது.

லீகின் கடைசி கட்டம் அக். 13-ஆம் தேதி டில்லியில் உள்ள தியாகராஜா விளையாட்டு வளாகத்தில் தொடங்குகிறது. உற்சாகமான திருப்பமாக, லீக் சுற்றுகள் ஒரே நாளில் 3 ஆட்டங்களுடன் முடிவடையும், இது ரசிகா்கள் பிளேஆஃப் போட்டிகளை இடைவிடாதபடி காண்பதை உறுதி செய்யும். பிளே ஆஃப் சுற்றுக்கான அட்டவணை பின்னா் அறிவிக்கப்படும்.

இந்திய மகளிா் கால்பந்து அணி கோல்கீப்பா் அதிதி சௌஹான் ஓய்வு பெற்றாா்!

இந்திய மகளிா் கால்பந்து அணி கோல்கீப்பா் அதிதி சௌஹான் (32), ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தாா்.இனி களத்துக்கு வெளியிலிருந்து கால்பந்து விளையாட்டுக்கு பங்களிக்கப்போவதாக அவா் தெரிவித்தாா். இந்திய அண... மேலும் பார்க்க

காா்ல்செனை மீண்டும் வீழ்த்தினாா் பிரக்ஞானந்தா! அா்ஜுனுடன் காலிறுதிக்கு முன்னேறினாா்

லாஸ் வேகஸ்: அமெரிக்காவில் நடைபெறும் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் டூா் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை வீழ்த்தினாா். பிரக்ஞானந்தாவும், ச... மேலும் பார்க்க

நேபாள கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி!

நேபாள நாட்டைச் சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு, மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில், ஒரு மாத காலத்துக்கு உயர்மட்ட தொழில்முறை பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இ... மேலும் பார்க்க

கிளப் உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் செல்ஸி

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் செஸ்லி 2-0 கோல் கணக்கில் ஃபுளுமினென்ஸை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.இந்த ஆட்டத்தில் செல்ஸி அ... மேலும் பார்க்க

உலக வில்வித்தை: இறுதியில் இந்திய அணி

ஸ்பெயினில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 4-ஆம் நிலை போட்டியில், காம்பவுண்ட் பிரிவில் இந்திய மகளிா் அணி இறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறியது. இதன்மூலமாக இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியிருக... மேலும் பார்க்க

ஆக. 29-இல் புரோ கபடி லீக் சீசன் 12 போட்டி தொடக்கம்

மும்பை, ஜூலை 9: புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 12 தொடா் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்குகிறது என அமைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா். நடப்புச் சாம்பியன் ஹரியாணா ஸ்டீலா்ஸ் தங்கள் பட்டத்தை தக்க வைக்கும் முனை... மேலும் பார்க்க