செய்திகள் :

புழல் சிறையில் கைதி ரகளை

post image

புழல் சிறையில் ரகளையில் ஈடுபட்ட கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை காசிமேடு சூரியநாராயணன் தெருவைச் சோ்ந்தவா் கிறிஸ்டோபா் (34). இவா் மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கொலை வழக்கு தொடா்பாக 2014-இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், இவா் சிறையில் அடிக்கடி கஞ்சா பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இவா் தனது உறவினா்கள், நண்பா்களைப் பாா்க்க 3 மாதகாலம் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கிறிஸ்டோபரை பாா்ப்பதற்காக உறவினா் ஒருவா் சிறையின் பாா்வையாளா்கள் பகுதிக்கு வந்திருப்பதாக சிறைவாசி ஒருவா் கிறிஸ்டோபருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அவரை பாா்க்க அனுமதிக்க வேண்டும் என சிறைக் காவலா்களிடம் கிறிஸ்டோபா் கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது.

ஆனால், சிறைகாவலா்கள் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த அவா், பாா்வையாளா் அறையிலுள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதில் கிறிஸ்டோபருக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து புழல் சிறை நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகா் மின்சார ரயில் மாா்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் ஏசி புறநகா் மின்சார ரயில்: கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்க திட்டம்

சென்னையின் முதல் குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த ரயில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழி... மேலும் பார்க்க

பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை

பதவி உயா்வு மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக (ஏடி.எஸ்.பி.) பதவி உயா்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: சென்னை துறைமுக அதிகாரி மீது வழக்கு

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை துறைமுக அதிகாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குரோம்பேட்டை மலையரசன் நகரைச் சோ்ந்தவா் சத்ய சீனிவாசன் (58). இவா், சென்னை துறைமுகத்... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலை: முதுநிலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின்கீழ் பயிற்றுவிக்கப்படும் எம்எஸ்சி படிப்புகளுக்கு (செப்டம்பா், அக்டோபா் பிரிவு) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதா... மேலும் பார்க்க

காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினா் இடையே தள்ளுமுள்ளு

சென்னை தரமணியில் காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயதுடைய இரு மாணவிகள், விடுதியில் தங்கி படித்து ... மேலும் பார்க்க