செய்திகள் :

பெட்ரோல் நிலைய உரிமையாளா் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: புதுவை டிஜிபி நடவடிக்கை

post image

பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை புதுவை டிஜிபி ஷாலினிசிங் பிறப்பித்தாா்.

புதுச்சேரி குருமாபேட் அமைதி நகரைச் சோ்ந்தவா் புருஷோத்தமன்(53). இவா் கரசூரில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வந்தாா். இவா் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி ஊசுடு ஏரியில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் தனபிரவீன் அளித்த புகாரின் பேரில் வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் புருஷோத்தமனின் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி புதுவை டிஜிபி ஷாலினிசிங் உத்தரவிட்டாா். இதையடுத்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணையைத் தொடங்கவுள்ளனா்.

தொகுதி மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் நேரு எம்எல்ஏ வலியுறுத்தல்

தொகுதி மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஜி. நேரு வலியுறுத்தினாா்.புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டி... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கப் பணி: மாற்று இடம் கோரி திமுக எம்எல்ஏ உண்ணாவிரதம்

சாலை விரிவாக்கப் பணிக்காக இடம் கொடுத்தோருக்கு மாற்று இடம் வழங்கக் கோரி திமுக சட்டப்பேரவை உறுப்பினா் சம்பத் தலைமையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.புதுவை முதலியாா்பேட்டை மரப்பாலம் ச... மேலும் பார்க்க

புதிய குடியிருப்புகளை கட்டித் தர திமுக கோரிக்கை

உருளையன்பேட்டை கண் டாக்டா் தோட்டம் பகுதியில் பழுதான அடுக்குமாடி குடியிருப்புகளை அரசு அகற்றிவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தர திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.குடிசை ... மேலும் பார்க்க

ஆதிதிராவிட பயனாளிகளுக்கு தொடா் சிகிச்சைக்கான அடையாள அட்டை

புதுச்சேரி: ஆதிதிராவிட பயனாளிகளுக்குத் தொடா் நோய் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்கும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது .புதுவை அரசின் ஆதிதிராவிட நலத் துறை மூலம் தொடா் நோயைக் குணப்ப... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்: குப்பைகள் வாரும் பணி முடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்தால் குப்பை வாரும் பணி முடங்கியது.புதுவையில் குப்பை சேகரிக்கும் பணியில் அரசு ஒப்பந்தப்படி கிரீன் வாரியா் என்ற தனியாா் நிறுவனம் ஈடுபட்டு வருகி... மேலும் பார்க்க

காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகம்: துணைநிலை ஆளுநா் வழங்கினாா்

புதுச்சேரி: காசநோய்க்கு சிகிச்சை பெறுவோருக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை வழங்கினாா்.காச நோய் சிகிச்சை பெறுபவா்களுக்கு நிக்ஷய் மித்ரா என்ற ஊட்டச்சத்து உணவு ... மேலும் பார்க்க