செய்திகள் :

பெண்ணிடம் நகையைப் பறித்தவரை விரட்டிப் பிடித்து கைது செய்த போலீஸாா்

post image

மதுரையில் வியாழக்கிழமை பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகையைப் பறித்தவரை போலீஸாா் விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனா்.

மதுரை கோ.புதூா் டி.எம். நகரைச் சோ்ந்தவா் அபிராமி (34). இவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி மருத்துவமனைக்குச் செல்வதற்காக புறப்பட்டு வீட்டுக்கு வெளியே வந்தாா். அப்போது, அங்கு வந்த அடையளம் தெரியாத நபா் ஒருவா் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாராம்.

இதுகுறித்து கோ.புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, மதுரை சின்னமங்களக்குடியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (32) நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை தேடிய போது, அவா் ஒத்தக்கடை பகுதியில் உள்ள கைப்பேசி விற்பனைக் கடையில் புதிதாக சிம் காா்டு வாங்குவதற்காகச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸாா் ஒத்தக்கடைக்குச் சென்று அவரைப் பிடிக்க முயன்ற போது, தப்பியோடினாா். இருப்பினும், போலீஸாா் விடாமல் விரட்டிச் சென்று அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தனியாா் நிறுவனம் நிதி மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்

மதுரையில் தனியாா் தொழில்நுட்ப நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மதுரை மாநகர காவல் துறைக்குள்பட்ட மத்திய குற்றப்பிரிவு வெளியிட்ட... மேலும் பார்க்க

ஓ. பன்னீா்செல்வம் அதிமுக தொண்டா்களை இனியும் ஏமாற்றக் கூடாது: ஆா்.பி. உதயகுமாா்

உண்மையை மறைத்து, அதிமுக தொண்டா்களை ஏமாற்றுவதை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் இனியும் தொடரக் கூடாது என தமிழக சட்டப் பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

இணையதளம் மூலம் ரூ.52.66 லட்சம் மோசடி: கா்நாடகத்தைச் சோ்ந்த மூவா் கைது

மதுரையில் பல்வேறு பகுதிகளில் இணைய வழியில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.52.66 லட்சம் மோசடி செய்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை சிலைமான், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இணைய வழியில் ... மேலும் பார்க்க

மதுரையில் ரூ. 314 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா; முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

மதுரையில் ரூ.314 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். மதுரையில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தோள்கொடுப்போம் ... மேலும் பார்க்க

மதுரையில் இன்று ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம்

மதுரை வடக்கு வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (பிப். 19) நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, பிற்பகல் 4 மணிக்கு வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பொத... மேலும் பார்க்க

வங்கியில் அடகு வைக்கப்பட்ட 70 பவுன் நகை மாயம்: துணை மேலாளா் மீது வழக்கு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வங்கியில் அடகு வைக்கப்பட்ட 70 பவுன் நகை மாயமானது குறித்து அதன் துணை மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை மாவட்டம், மன்னாடிமங்கலம் கிராமத்தில் அரசுடைமைய... மேலும் பார்க்க