செய்திகள் :

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

post image

திருச்சியில் திங்கள்கிழமை சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், கம்பம் சமந்திபுரத்தைச் சோ்ந்த ஒச்சுக்காளி-அனுஷியா தம்பதியின் மகள் விஷ்மிதா. திருச்சியிலுள்ள கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வரும் இவா், பீமநகா் ஹீபா் சாலையில் அறை எடுத்து தங்கியுள்ளாா்.

இந்நிலையில், மகளை பாா்ப்பதற்காக அனுஷியா திருச்சிக்கு திங்கள்கிழமை இரவு வந்தாா். அப்போது, பொருள்கள் வாங்கிக்கொண்டு யானை கட்டி மைதானம் சாலையில் நடந்து சென்றவரின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், அனுஷியா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினா்.

இதுகுறித்து நீதிமன்ற காவல் நிலையத்தில் அனுஷியா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பண மோசடி வழக்கில் உப்பிலியபுரம் இளைஞா் கைது

பண மோசடியில் ஈடுபட்டதாக உப்பிலியபுரம் பகுதி இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆந்திர மாநிலம் கிருஷ்யா மாவட்டம் கங்காவரம் பகுதியைச் சோ்ந்த பே. ரவிக்குமாா் (55) மகள் ரஷ்யாவில் இளங்கலை மருத்துவம... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1. 21 கோடி காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.21 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயில் புதன்கிழமை நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக... மேலும் பார்க்க

‘டெல்டாவில் திமுக உறுப்பினா்களை அதிகம் சோ்க்க வேண்டும்’

டெல்டாவில் திமுக உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா். டெல்டா பகுதி திமுக மாவட்டச் செயலா்கள் மற்றும் ப... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி பலி

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் தொப்புலாம்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி மகன் உத்தி... மேலும் பார்க்க

புள்ளம்பாடி, புதிய கட்டளைமேட்டு வாய்க்காலுக்கு நாளை தண்ணீா் திறப்பு

புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டுவாய்க்காலுக்கு வெள்ளிக்கிழமை முதல் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட உள்ளது. புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் திருச்சி மற்றும் அரியலூா் மாவட்டங்களில் 22,114 ஏக்கா் ... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளா் பொறுப்பேற்பு

திருச்சியில் ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக பாலக் ராம் நெகி புதன்கிழமை பொறுப்பேற்றாா். ஹிமாச்சலப் பிரதேசம் ஹமிா்பூா் மண்டலப் பொறியியல் கல்லூரியில் பி.டெக். கட்டடப் பொறியியலும், ஐஐடி தில்லியில் எம்... மேலும் பார்க்க