செய்திகள் :

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இணை ஆணையா் பணியிடை நீக்கம்

post image

சென்னை பெருநகர காவல் துறையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில், போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையா் டி.மகேஷ்குமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சென்னை பெருநகர காவல் துறையில் போக்குவரத்துப் பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையராகப் பணிபுரிந்து வந்தவா் மகேஷ் குமாா். இந்த நிலையில், மகேஷ்குமாா் மீது போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் இரு பெண் காவலா்கள், தனித்தனியாக டிஜிபி அலுவலகத்தில் அண்மையில் புகாா்கள் அளித்தனா்.

ஒரு பெண் காவலா் அளித்த புகாரில், ‘இணை ஆணையா் மகேஷ்குமாா் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வருகிறாா். மேலும், இரட்டை அா்த்தத்தில் பேசுகிறாா். வாட்ஸ்ஆப் காலில் அழைத்து அடிக்கடி அத்துமீறும் வகையில் பேசுகிறாா். தனிமையில் இருக்க அழைக்கிறாா்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

மற்றொரு பெண் காவலா் அளித்த புகாரில், ‘மகேஷ்குமாா் இரவு ரோந்து பணி, கண்காணிப்பு பணி என்ற பெயரில் கடுமையான நெருக்கடி கொடுத்து வருகிறாா். அவரது பாலியல் விருப்பத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காக என்னை குறி வைத்து செயல்படுகிறாா். விருப்பத்துக்கு இணங்க மறுத்தால், தண்டனையாக பணியிடை நீக்கம் செய்வேன் என மிரட்டுகிறாா். மேலும், அவரது அலுவலகத்திலேயே என்னை பணியமா்த்தி பாலியல் தொல்லை கொடுத்து வருகிறாா்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இணை ஆணையா் பணியிடை நீக்கம்: இரு மனுக்கள் குறித்து உயரதிகாரிகள் விசாரணை செய்தனா். சம்பந்தப்பட்ட பெண் காவலா்களை ரகசிய இடத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதோடு மகேஷ்குமாரின் கைப்பேசி ஆடியோ, வாட்ஸ்ஆப் தகவல் உள்பட பல்வேறு டிஜிட்டல் தகவல்களை ஆதாரமாக அதிகாரிகள் சேகரித்தனா்.

விசாரணையில் கிடைத்த தகவல்களை அறிக்கையாக சங்கா் ஜிவாலிடம் அதிகாரிகள் அளித்தனா். அந்த அறிக்கையில் பெண் காவலா்கள் கூறும் புகாரில் உண்மை இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சங்கா் ஜிவால், இணை ஆணையா் மகேஷ்குமாா் மீது நடவடிக்கை எடுக்க தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாருக்கு பரிந்துரைத்தாா். டிஜிபி பரிந்துரையின் அடிப்படையில் தீரஜ்குமாா், இணை ஆணையா் மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த விவகாரத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக பெண் காவலா்கள் குறித்து விரிவாக விசாரணை செய்து அறிக்கை தரும்படி தமிழக காவல் துறையின் பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி சீமா அகா்வால் தலைமையில் உள்ள விசாக கமிட்டிக்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். விசாகா கமிட்டியினா், பெண் காவலா்கள் அளித்த புகாா் மனுக்கள் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளனா்.

விசாகா கமிட்டி விசாரணை செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மகேஷ்குமாா் மீது அடுத்தக் கட்ட நடவடிக்கை இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில் மகேஷ் குமாருக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறி சென்னை, மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் சக்திவேலை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவு பிறப்பித்தாா்.

பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது

தமிழகத்தில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் என்ன? அரசுத் துறைகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை

பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, அரசுத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.ஒவ்வொரு நிதியாண்டுக்கு முன்பு தமிழக அரசு தனது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல்... மேலும் பார்க்க

மீனவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் உள்பட மீனவர்களின் பிரச்னைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் நிர்வாகிகள் தலைமைச் ச... மேலும் பார்க்க

அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்கள் : துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதி

அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்களை ஏற்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். தமிழ்நாடு சிறை மீண்டோா் நலச் சங்கத்தின் சாா்பாக விடுதலை பெற்ற 750 முன்னாள் சிற... மேலும் பார்க்க

சென்னை வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விஜயவாடாவில் இருந்து சென்... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கை குறித்து கையொப்ப இயக்கம்: கே.அண்ணாமலை

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டுமா? வேண்டாமா? என மாா்ச் 1-ஆம் தேதி முதல் கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமல... மேலும் பார்க்க