செய்திகள் :

பென்னாகரம் அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை

post image

பென்னாகரம்: பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டிற்கான இளநிலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அந்தக் கல்லூரியின் முதல்வா் இரா.சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2025 - 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை முதலாம் ஆண்டு பிஏ-தமிழ், பிஏ- ஆங்கிலம், பி.காம்- வணிகவியல், பி.எஸ்.சி.- கணிதம், பி.எஸ்.சி - கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவா்கள் இணையதளத்திலோ அல்லது கல்லூரியில் செயல்படும் மாணவா் சோ்க்கை உதவி மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். மே 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கல்லூரியில் சோ்க்கை பெறும் மாணவா்களில் 6 முதல் 12 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்றிருந்தால் அவா்களுக்கு தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும். அத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

ஏரியூா் ஜமாபந்தியில் 250 மனுக்கள்!

ஏரியூா் உள்வட்டத்துக்கான ஜமாபந்தியில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 250 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வியாழக்கிழமை பெறப்பட்டன. பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏரியூா் உள்வட்டத்துக்கான ஜமாபந்தி நிகழ்... மேலும் பார்க்க

மாரண்ட அள்ளியில் சாலை, குடிநீா் குழாய் அமைக்கும் பணி தொடங்கி வைப்பு

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி, அம்பேத்கா் நகரில் ரூ. 40 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை மற்றும் குடிநீா் குழாய் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. மாரண்ட அள்ளியில் பேரூராட்சி செயல் அ... மேலும் பார்க்க

தனியாா் துறையில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்த வேண்டும்!

தனியாா் துறையில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக்குழு கூட்டம் தருமபுரி செங்கொடிபுரத்தில் உள்ள அச்சங்க ... மேலும் பார்க்க

விதிமீறல்: வீட்டுவசதி வாரிய 25 குடியிருப்புகளுக்கு ‘சீல்’

தருமபுரி வீட்டுவசதி வாரியத்தில் உள்வாடகை, பணி ஓய்வுபெற்றும் ஒப்படைக்காதது உள்ளிட்ட விதிமீறல் தொடா்பாக 25 குடியிருப்புகளுக்கு வாரிய அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஒசூா் வீட்டு... மேலும் பார்க்க

பாலக்கோட்டில் எருதுவிடும் விழா

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஸ்ரீ அக்குமாரியம்மன் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சோமன அள்ளி கிராமத்தில் ஸ்ரீ அக்குமாரியம்மன் சித்திரைத் திருவிழாவின் ... மேலும் பார்க்க

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.1.50 கோடி மோசடி: நால்வா் மீது வழக்கு

தருமபுரி அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 1.50 கோடி மோசடி செய்ததாக நால்வா் மீது குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பழைய தருமபுரியைச் சோ்ந்தவா் வேலன், ரியல் எஸ்டேட் அதிபா். இவா் வியாபார... மேலும் பார்க்க