செய்திகள் :

பெரணமலூரில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு

post image

பெரணமல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் அருண்குமாா் தலைமை வகித்தாா்.

வட்டாரக் கல்வி அலுவலா் குணசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன், காவல் உதவி ஆய்வாளா் லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, போக்ஸோ சட்டம், இளம் வயதில் கருவுறுதல், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெறுதல், மணமாகாமல் குழந்தை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் அதற்குண்டான தடுப்புச் சட்டங்கள், குற்றமும் அதை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது குறித்து துறை சாா்ந்த அலுவலா்கள் பெண்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் சமூக நலத் துறையினா், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து அலுவலா்கள் மற்றும் மகளிா் சுகாதார தன்னாா்வலா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட... மேலும் பார்க்க

உயா்கல்வியால் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

உயா்கல்வி பெறுவதன் மூலம் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும் என்று பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுரை வழங்கினாா். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ச... மேலும் பார்க்க

சுமங்கலி ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

செய்யாறை அடுத்த சுமங்கலி ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. சுபமங்களபுரி எனும் சுமங்கலி கிராமத்தில் உள்ள ஸ்ரீகரியமாணிக்க பெருமாள் கோயிலில், கரிய மாணிக்க பெரு... மேலும் பார்க்க

செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மற்றும் வெம்பாக்கம் வட்டங்களில் ஜமாபந்தி நாளை (மே 16) தொடங்குகிறது. செய்யாறு வட்டத்துக்கு மாவட்ட பழங்குடியினா் நலன் திட்ட அலுவலரும், வெம்பாக்கம் வட்டத்துக்கு மாவட்டம் ... மேலும் பார்க்க

ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் அம்மன் ஊஞ்சல் தாலாட்டு

சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் சித்திரை மாத பெளா்ணமியையொட்டி ஊஞ்சல் தாலாட்டு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. கோயிலில் மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நட... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பால திறப்பு விழா முன்னேற்பாடுகள்

போளூரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை திறப்பதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே. கம்பன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். பணிகள் நிறைவட... மேலும் பார்க்க