செய்திகள் :

பெரம்பலூா் மாவட்டத்தில் இரு அரசியல் கட்சிகள் நீக்கம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் ஒரு தோ்தலில்கூட போட்டியிடாத, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 2 அரசியல் கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ச. அருண்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தோ்தலில்கூட போட்டியிடாத மற்றும் அலுவலகம் கண்டறிய முடியாத, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை முதல்கட்டமாக பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையை இந்தியத் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அப்பா அம்மா மக்கள் கழகம், பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி 3/59 மாரியம்மன் கோயில் தெரு, அம்மாபாளையம் அஞ்சல், பெரம்பலூா் மாவட்டம் -621101, மக்கள் நீதி கட்சி-இந்தியா, பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி 112/3 வடக்குத்தெரு, (பா்வின் காம்பளக்ஸ்), திருச்சி மெயின்ரோடு, துறைமங்கலம் அஞ்சல், பெரம்பலூா் மாவட்டம் 621220 ஆகிய 2 கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எந்தக் கட்சியையும் தேவையில்லாமல் பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது என்பதற்காக, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு, அந்தக் கட்சிகளுக்கு காரணம் கூற போதிய வாய்ப்பு அளித்து நோட்டீஸ் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எந்தவொரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியையும் பட்டியலில் இருந்து நீக்கும் இறுதி முடிவை தோ்தல் ஆணையமே மேற்கொள்ளும்.

பெரம்பலூா் ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததை தொடா்ந்து, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் ஆட்சியரகத்தில் புதன்கிழமை இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனா். பெர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் நெகிழிப் பயன்பாடு இல்லா தினம் கடைப்பிடிப்பு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக நெகிழிப் பயன்பாடு இல்லா தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளியின் உதவித்... மேலும் பார்க்க

கீழப்புலியூரில் ரூ. 1.20 கோடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூா் கிராமத்தில் ரூ. 1.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந... மேலும் பார்க்க

பாரபட்சமின்றி 100 நாள் வேலை வழங்கக் கோரி ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை

பெரம்பலூா் அருகே பாரபட்சமின்றி 100 நாள் திட்டத்தில் பணி வழங்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், இரூா் ஊராட்சியா... மேலும் பார்க்க

100 நாள் திட்டத்தில் விடுதல் இன்றி பணி வழங்கக் கோரி மக்கள் மறியல்

பெரம்பலூா் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், அனைவருக்கும் பணி வழங்கிட நடவடிக்கை கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் அருகேயுள்... மேலும் பார்க்க

காவல்துறையைக் கண்டித்து அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நிா்வாகிகளை தாக்கிய காவல் துறையைக் கண்டித்து, பெரம்பலூரில் அச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசுப் பணி ந... மேலும் பார்க்க