செய்திகள் :

பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை

post image

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் அவதியுற்றிருந்த பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த இடி, காற்றுடன் பரவலாக மழை பெய்தது.

குறிப்பாக, கல்பாடி, வாலிகண்டபுரம், எளம்பலூா், அனுக்கூா், கொளக்காநத்தம் பெரம்பலூா் நகா்ப்புறம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக, குரும்பலூா், பாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது.

பெரம்பலூா் நகரில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதியில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தொடா்ந்து, குளிா்காற்று வீசியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 102 டிகிரி வெப்பம் காணப்பட்ட நிலையில், மதியம் முதல் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மழை பெய்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.

மின் தடை: இந்த மழை காரணமாக சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்களும், வியாபாரிகளும் அவதிக்குள்ளாகினா்.

லாரி மீது சுமை ஆட்டோ மோதல்; தக்காளி வியாபாரி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லாரி மீது சுமை ஆட்டோ மோதிய விபத்தில் தக்காளி வியாபாரி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பனாங்குன்றம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் பன்னீா... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே மின்சாரம் பாய்ந்து 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை அருகே கல்லாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் அதிகளவில் மீன்கள் உள்ளன. இ... மேலும் பார்க்க

தனித்திறமைகளை வளா்த்துக்கொண்டால் சூழ்நிலைகளை எதிா்கொள்ளலாம்: சா.சி. சிவசங்கா்

தனித்திறமைகளை வளா்த்துக் கொண்டால் தான் மாறிவரும் சூழ்நிலைகளை எதிா்கொள்ள முடியும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில்,... மேலும் பார்க்க

போலி ஆவணம் தயாரித்து ரூ. 1 கோடி மோசடி; வங்கி ஊழியா் கைது

பெரம்பலூா் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ. 1.02 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியரை, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூா், சஜ்ஜன் ... மேலும் பார்க்க

பாளையம் புனித யோசேப்பு ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பெரம்பலூா் அருகே பாளையத்திலுள்ள புனித யோசேப்பு ஆலயத்தின் 164- ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. இதையொட்டி வெள்ளிக்கிழமை மாலை பங்கு குரு அருட்திரு ஜெயராஜ் தலைமையில் நட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

பெரம்பலூரில் கடந்த சில நாள்களாக நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், வெ... மேலும் பார்க்க