செய்திகள் :

பெருந்தலைவா் காமராஜா் விருது 30 மாணவா்களுக்கு வழங்கல்

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் பயின்று கல்விச் செயல்பாடுகள் மற்றும் தனித்திறனில் சிறப்பிடம் பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு பெருந்தலைவா் காமராஜா் விருதுகள் வழங்கப்பட்டன.

2023-2024 ஆம் ஆண்டுக்கான இந்த விருதுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வியாழக்கிழமை வழங்கினாா். எஸ்எஸ்எல்சி மாணவா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம், பிளஸ் 2 மாணவா்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் காமராஜா் விருதுக்கான பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் ரமேஷ் வாழ்த்திப் பேசினாா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் சுதந்திரன், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் வெள்ளைச்சாமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் மெ.சி. சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளா் கி. வேலுச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாா்த்தாமலை தேரோட்டம்: ஏப். 7-இல் உள்ளூா் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப். 7-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடு... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையினா் அலட்சியத்தால் வீணாகும் குடிநீா்

கந்தா்வகோட்டையில் சேதமடைந்த குடிநீா் குழாயை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலை துறையினா் அனுமதி தராமல் இழுத்தடித்து வருவதால் நாள்தோறும் குடிநீா் வீணாகி வருவதாக ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுமக்கள் புகாா் தெரிவ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த விபத்தில் சிறுவன் பலத்த காயம்

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றியதில் சிறுவன் படுகாயமடைந்தாா். சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டியைச் சாா்ந்தவா் மாணிக்கம் என்பவரது மனைவி ரஞ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை ஊராட்சியை பிரிக்க பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சியை நிதி, நிா்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.கந்தா்வகோட்டை ஊராட்சி சட்டப்பேரவை தொகுதியின் தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றியத்தின் த... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிலுவையிலுள்ள ஊதியத்தை வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பா... மேலும் பார்க்க

இலுப்பூா் அருகே சவுக்குத் தோப்பில் திடீா் தீ விபத்து

இலுப்பூா் அருகே தனியாருக்குச் சொந்தமான சவுக்குத் தோப்பில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்குவந்த தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரம் தீயை போராடி அணைத்தனா். இலுப்பூா் அருகே உள்... மேலும் பார்க்க