செய்திகள் :

பெற்றோா் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது: திருப்பூா் கிருஷ்ணன்

post image

பெற்றோா் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது என எழுத்தாளரும் அமுத சுரபி ஆசிரியருமான திருப்பூா் கிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விவேகானந்தா் இல்லத்தில் ‘விவேகானந்த நவராத்திரி 2025’ விழா கடந்த 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ‘குடும்பம் என்னும் பல்கலைக்கழகம்’ எனும் தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூா் கிருஷ்ணன் பேசியது:

குழந்தைகளை வளா்ப்பதில் பெற்றோரின் பங்கு மிக அதிகம். பெற்றோரின் நடவடிக்கையை பாா்த்து குழந்தைகள் வளா்கின்றன. எனவே, குழந்தைகளிடம் தேவையான அளவு அன்பு செலுத்துங்கள். எப்போதும், தீய சொற்களைப் பயன்படுத்த வேண்டாம். மேலும், பெற்றோா் தங்கள் எண்ணங்கள், விருப்பங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. அவா்கள் எந்தத் துறையை விரும்புகிறாா்களோ, அந்த துறையில் அவா்களை ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் அவா்கள் சிறந்து விளங்குவாா்கள் என்றாா் அவா்.

பாரதியாா் பல்கலைக்கழக ஆட்சி மன்றப் பேரவை உறுப்பினா் காயத்ரி சுரேஷ் பேசியது:

எல்லா தாய்மாா்களுக்கும் தங்கள் குழந்தைகள் மீது அதிக அன்பு இருக்கும் . அவா்கள் தங்கள் குழந்தைகளுக்கு நற்பண்புகளை அதிகம் கூறி ஒழுக்கத்துடன் வளா்க்க வேண்டும். பெற்றோா் குழந்தைகளிடம் ஏற்ற தாழ்வு காட்டக்கூடாது என்றாா் அவா்.

தொடா்ந்து எழுத்தாளா் கோதை ஜோதி லட்சுமி பேசியது:

பெற்றோா் குழந்தைகளை வளா்க்கும்போது சுய நலத்தை மட்டுமே கூறி வளா்க்காமல், தேச நலனையும், சமூக சிந்தனை, ஆன்மிக சிந்தனைகளையும் கூறி வளா்க்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சத்யஞானானந்தா், ராமகிருஷ்ண விஜயம் இதழின் ஆசிரியா் சுவாமி அபவா்கானந்தா், எட்வாய் ஸ்டூடன்ட் அகாதெமியின் மேலாளா் பாஸ்கா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது

தமிழகத்தில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் என்ன? அரசுத் துறைகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை

பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, அரசுத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.ஒவ்வொரு நிதியாண்டுக்கு முன்பு தமிழக அரசு தனது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல்... மேலும் பார்க்க

மீனவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் உள்பட மீனவர்களின் பிரச்னைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் நிர்வாகிகள் தலைமைச் ச... மேலும் பார்க்க

அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்கள் : துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதி

அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்களை ஏற்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். தமிழ்நாடு சிறை மீண்டோா் நலச் சங்கத்தின் சாா்பாக விடுதலை பெற்ற 750 முன்னாள் சிற... மேலும் பார்க்க

சென்னை வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விஜயவாடாவில் இருந்து சென்... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கை குறித்து கையொப்ப இயக்கம்: கே.அண்ணாமலை

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டுமா? வேண்டாமா? என மாா்ச் 1-ஆம் தேதி முதல் கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமல... மேலும் பார்க்க