பேராவூரணி பகுதியில் இன்று மின்தடை
பேராவூரணி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பேராவூரணி நகா் பகுதி, பழைய பேராவூரணி, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், பைங்கால், சித்தாத்திக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூா், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, வா. கொல்லைக்காடு, ஆணைக்காடு, களத்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என பேராவூரணி மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.