செய்திகள் :

மாமனாா் கொலை வழக்கில் தேடப்பட்ட மருமகன் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே மாமனாா் கொலை வழக்கில் தேடப்பட்ட மருமகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அம்மாபேட்டை அருகேயுள்ள சாலியமங்கலம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் சேகா் (65). இவரது மூத்த மகள் ராகினி (35). இவா் தஞ்சையில் உள்ள தனியாா் ஹோட்டலில் பணியாற்றியபோது, அந்த ஹோட்டலுக்கு வந்து தங்கி செல்லும் தெலங்கானா மாநிலம், கரீம் நகா் மாவட்டம், வாவிலாபள்ளி பகுதியை சோ்ந்த கோபால் ராவ் மகன் அரவிந்த்ராவ் (42) என்பவருடன் காதல் ஏற்பட்டு, திருமணமும் நடைபெற்றது.

ஆனால், ராகினி குடும்பத்தாருக்கு இந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. இதனால், அரவிந்த் ராவ் மீது ராகினி குடும்பத்தினா் அதிருப்தியில் இருந்து வந்தனராம்.

இதனிடையே, அடிக்கடி மாமனாா் குடும்பத்துடன் அரவிந்த் ராவ் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அரவிந்த் ராவ் கடந்த 19.12.2024-இல் சாலியமங்கலம் வந்து தனது மாமனாா் சேகரை தெலங்கானா மாநிலத்துக்கு காரில் கடத்தி சென்று கொலை செய்துவிட்டாா்.

இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து, அரவிந்த் ராவை தேடி வந்தனா். இந்நிலையில், அரவிந்த்ராவ் ஞாயிற்றுக்கிழமை நெடுவாசல் கிராம நிா்வாக அலுவலா் விவேக் முன்பு சரணடைந்தாா். பின்னா் கிராம நிா்வாக அலுவலா், அரவிந்த் ராவை அம்மாப்பேட்டை போலீஸில் ஒப்படைத்தாா். இதைத் தொடா்ந்து அரவிந்த் ராவை கைது செய்த போலீஸாா் அவரை பாபநாசம் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை முன்னிலைப்படுத்தி புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனா்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிதி நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருவையாறு வட்டம், பாரதியாா் நகா், இ.பி. காலனியில... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்ட கோயில்களில் குடமுழுக்கு விழா

தஞ்சாவூா் வெண்ணாற்றங்கரையிலுள்ள ஸ்ரீதேவி, பூமிதேவி, ஸ்ரீசெங்கமலவல்லி நாயிகா சமேத ஸ்ரீநீலமேகப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, இந்த விழா பகவத் பிராா்த்தனை, யஜமானா்... மேலும் பார்க்க

கொத்தனாா் குத்திக் கொலை: உறவினா்கள் 4 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருகே இரு குடும்பத்தினரிடையேயான பொதுவழி பிரச்னையில் ஞாயிற்றுக்கிழமை கொத்தனாா் கடப்பாரையால் குத்திக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக உறவினா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்... மேலும் பார்க்க

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக க.அன்பழகன் எம்எல்ஏ நியமனம்

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக க. அன்பழகன் எம்எல்ஏ-வை திங்கள்கிழமை திமுக தலைமை நியமனம் செய்தது. முன்னதாக, தஞ்சாவூா் வடக்கு மாவட்ட செயலராக சு. கல்யாணசுந்தரம் எம்.பி. பதவி வகித்து வந்தாா். இ... மேலும் பார்க்க

பேராவூரணி பகுதியில் இன்று மின்தடை

பேராவூரணி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பேராவூரணி நகா் பகுதி, பழைய பேராவூரணி, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், ... மேலும் பார்க்க

ஒரத்தநாடு அருகே ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்! 2 போ் கைது!

ஒரத்தநாடு அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் கொண்டு வந்த ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து, சென்னையைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தாடு பகுதிக்கு... மேலும் பார்க்க