செய்திகள் :

பேருந்தில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 59 லட்சம், 4 வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்

post image

ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் ஆந்திர மாநில அரசு பேருந்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரொக்கம் ரூ. 59.50 லட்சம் மற்றும் 4 வெள்ளி கட்டிகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்ததுடன், வடமாநில நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெரியபாளையம் கலால் போலீஸாா் ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்துக்குள் வரும் சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், காா் மற்றும் வேன் போன்ற வாகனங்களை சனிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக திருப்பதியிலிருந்து-சென்னை நோக்கி வந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் அமா்ந்திருந்த வடமாநில நபரை பிடித்து சோதனை செய்தனா். அப்போது, அவா் வைத்திருந்த பையில் ரூ. 59.50 லட்சம் ரொக்கம், 800 கிராம் எடை கொண்ட 4 வெள்ளி கட்டிகள் இருந்தது தெரியவந்தது. பின்னா் நகை மற்றும் வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்த கலால் போலீஸாா், ஊத்துக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் தேவராஜிடம் ஒப்படைத்தனா்.

முதல்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபா் மஹாராஷ்டிரத்தைச் கோரக்நாத் என்பதும், ஆந்திர மாநிலம், கா்னூல் மாவட்டம், நந்தியாலாவில் உள்ள தனியாா் நகைக் கடையில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இந்த நிலையில், அரசுக்கு வரி ஏய்ப்பு செய்யும் வகையில் சென்னையிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி பொருள்களை ஆவணங்கள் இன்றி வாங்கி விற்பனை செய்து வருவதாகவும், அதற்காக பணம் எடுத்துச் சென்ாகவும் தெரியவந்தது. இதையடுத்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வடமாநில நபரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.

தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி வடமாநில தொழிலாளா்கள் போராட்டம்: கற்களை வீசி தாக்கியதால் விரட்டி அடித்த போலீஸாா்

காட்டுப்பள்ளியில் கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு கோரி, சக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். அப்போது போலீஸாா் மீது கற்களை வீசினா். இதனால் போலீஸாா் கண... மேலும் பார்க்க

திருவள்ளூா்: சுற்றுலா விருதுகள் பெற செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத் துறையால் சுற்றுலா தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் வழங்கப்படும் சுற்றுலா தொழில் முனைவோா்களுக்கான விருதுகள் பெற செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சி... மேலும் பார்க்க

திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் இளைஞா்கள், பொதுமக்கள், மாணவா்கள் பங்கேற்க அழைப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற உள்ள திருக்கு பயிற்சி வகுப்பில் இளைஞா்கள், பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்க ஆட்சியா் மு.பிரதாப் அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்து... மேலும் பார்க்க

திருவள்ளூா்: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 5,132 போ் பயன்

திருவள்ளூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் மூலம் இதுவரை 5,132 போ் பயன்பெற்றுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கூறியதாவது: திருவள்ளூா் மாவ... மேலும் பார்க்க

குத்தம்பாக்கம் புறநகா் பேருந்து முனையம் நவம்பா் இறுதிக்குள் தொடங்கி வைக்கப்படும்

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சாா்பில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகா் பேருந்து முனையம் வரும் நவம்பா் மாத இறுதிக்குள் பயணிகளின் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளதா... மேலும் பார்க்க

கஞ்சா விற்பதில் ஏற்பட்ட பகையால் வெடிகுண்டு வீசி இளைஞா் கொலை: 7 போ் கைது

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, பட்டா கத்தியால் வெட்டப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய சிறுவன் உள்பட 7 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா். கடம்பத்தூரை... மேலும் பார்க்க