செய்திகள் :

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடிகை சிநேகா குடும்பத்தினருடன் சாமி தரிசனம்

post image

கோவை: புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடிகை சிநேகா தனது கணவர் பிரசன்னா மற்றும் மகனுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்று பேரூர் பட்டீஸ்வரர் கோயில். இந்த கோயில் 2 ஆம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டது. மேலும், அருணகிரிநாதர் மற்றும் கச்சப்ப முனிவரால் பாடப்பட்ட கோயிலாகவும் திகழ்கிறது.

புகழ்பெற்ற பட்டீஸ்வரர் கோயிலுக்கு கிரிக்கெட் வீரர் சேவாக் சமீபத்தில் சாமி தரிசனம் செய்தால், மேலும் நடிகர் சூர்யா, யோகி பாபு போன்ற நடிகர்களும் இந்தக் கோயிலின் வரலாற்று சிறப்பு அம்சங்களை அறிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

இந்த பட்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பட்டீஸ்வரர் கோயிலில் நடிகை சிநேகா தனது கணவர் பிரசன்னா, மகன், தந்தை மற்றும் உறவினர்களுடன் வந்து சாமி தரிசனம்

இந்நிலையில், நடிகை சிநேகா தனது கணவர் பிரசன்னா, மகன், தந்தை மற்றும் உறவினர்களுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

அவர்கள், பட்டீஸ்வரரை வழிபட்டு அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர். அதன்பிறகு கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள பால தண்டபாணி, பச்சை நாயகி அம்மன், நடராஜர் சன்னதிகளில் பக்தியுடன் வழிபட்டனர்.

பின்னர், கோயில் கொடிமரம் முன்பு விழுந்து வணங்கினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் கோயிலில் அமர்ந்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.

நடிகை சிநேகா, பிரசன்னாவை கண்ட பக்தர்கள் அவர்களுடன் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

நடிகை சிநேகா, பிரசன்னாவுடன் செல்பி எடுத்துக்கொண்ட பக்தர்கள்.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? தேசிய சுகாதாரத் திட்டத்தில் வேலை!

Actress Sneha visited the famous Perur Patteswarar Temple with her husband Prasanna and son and had darshan of the deity.

திருமண ஆசை காட்டி பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

காஞ்சிபுரம்: பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிய வழக்கில், இளைஞருக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்... மேலும் பார்க்க

புதுச்சேரிக்கு சொகுசு கப்பல் வருகை: அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரிக்கு சொகுசு பயணிகள் கப்பல் வெள்ளிக்கிழமை வருவதை நிறுத்தக் கோரி துறைமுக அருகே அதிமுகவினர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை வழியாக புதுச்சேரிக்கு பயணிகள் சொகுசு கப்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே விஜயநகர ஆட்சி கால பாறை கல்வெட்டுகள் கண்டெடுப்பு!

திருப்பத்தூா் அடுத்த காக்கங்கரை அருகே விஜயநகர ஆட்சி கால பாறை கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனிசாமி, திருவள்ள... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு: கனிமொழி எம்பி ஆய்வு

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து கனிமொழி எம்பி ஆய்வு மேற்கொண்டாா்.திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடம... மேலும் பார்க்க

முருகன் மாநாட்டுக்கு பணம் கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

வேதாரண்யம்: துளசியாப்பட்டினத்தில் ஔவையார் மணிமண்டபம் ஒப்பந்ததாரரிடம் முருகன் மாநாட்டுக்கு பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 2 பேரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.நாகை மாவட... மேலும் பார்க்க

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்: செந்தில் பாலாஜி

கோவை: கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுடன் பேசியதாவது:... மேலும் பார்க்க