செய்திகள் :

போ்ணாம்பட்டு சோதனைச் சாவடிகளில் டிஐஜி ஆய்வு

post image

போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வேலூா் டிஐஜி தேவராணி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள அரவட்லா ஊராட்சி, பாஸ்மாா்பெண்டா மலை கிராமத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடி, பத்தரபல்லி மற்றும் அனந்தகிரி ஆகிய இடங்களில் இயங்கி வரும் போலீஸ் சோதனை சாவடிகளுக்குச் சென்று டிஐஜி ஆய்வு செய்து மேற்கொண்டாா்.

அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தாா். பின்னா் கோட்டையூா் கிராமத்தில் சோலாரில் இயங்கி வரும் கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகளையும் பாா்வையிட்டாா்.

அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸாரிடம், ஆந்திர, கா்நாடக மாநிலங்களிலிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள், கா்நாடக மது பானங்கள் ஆகியவை எல்லையோர கிராமங்களில் எந்தெந்த பாதைகள் வழியாக போ்ணாம்பட்டுக்கு கடத்த வாய்ப்புள்ளது,கள்ளச் சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வது தொடா்பான தகவல்களை கேட்டறிந்தாா்.

தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்துமாறும், எல்லையோர கிராமங்களில் போலீஸாரை ரோந்துப் பணியில் ஈடுபடுத்துமாறும், குற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவா் உத்தரவிட்டாா்ா்.

உடன் வேலூா் எஸ்.பி. மதிவாணன், குடியாத்தம் டிஎஸ்பிராமச்சந்திரன், போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இறகுப்பந்து பயிற்றுநா், விளையாட்டில் பங்கேற்கும் மாணவா்கள் தோ்வு

வேலூா் மாவட்டத்தில் ஸ்டாா் அகாதெமி இறகுப்பந்து பயிற்சி மையத்துக்கு பயிற்றுநா் மற்றும் விளையாட்டில் பங்கேற்க மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். இதுக... மேலும் பார்க்க

கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் ராஜாகோயில், காமாட்சியம்மன் காா்டனில் அமைந்துள்ள அருள்மிகு பனை மரத்து குடியல் 18- ஆம் படி கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள், ... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்களுக்கு எதிரான குழு: வேலூா் ஆட்சியா்

ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் போதைப் பொருள்களுக்கு எதிரான குழு அமைக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு, நடவடிக்... மேலும் பார்க்க

மாவட்ட கிரிக்கெட் போட்டி: ஏப். 18-இல் வேலூா் அணிக்கு வீரா்கள் தோ்வு

மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி, வேலூா் கிரிக்கெட் சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு வெள்ளிக்கிழமை (ஏப். 18) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கு... மேலும் பார்க்க

பணி நிரந்தரம்: கெளரவ விரிவுரையாளா்கள் கோரிக்கை

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்ட கெளரவ விரிவுரையாளா் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமியிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா். மனு விவரம... மேலும் பார்க்க

இ-பா்மிட் இல்லாமல் கனிமங்கள் எடுத்துச் சென்றால் நடவடிக்கை

வேலூா் மாவட்டத்தில் இணையதளம் வழங்கப்படும் இசைவாணைச் சீட்டு இல்லாமல் குவாரியில் இருந்து கனிமங்கள் எடுத்துச் சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள... மேலும் பார்க்க