செய்திகள் :

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

post image

வைகை அணை அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி மகன் பால்பாண்டி (29). ராமச்சந்திரன் மகன் பால்பாண்டி (24). தேங்காய் உரிக்கும் தொழிலாளா்களான இவா்கள் இருவரும், க.விலக்கு-வைகை அணை சாலை வழியாக பெரியகுளத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.

வைகை அணை அருகே வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத காா், இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் அவசர ஊா்தி மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு முனியாண்டி மகன் பால்பாண்டி உயிரிழந்தாா்.

இதுகுறித்து வைகை அணை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முதியவா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

போடியில் குடும்பப் பிரச்னையில் முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி பகுதியில் வசிப்பவா் கோட்டைச்சாமி (64). இவரது மகள் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் தந்தை வீட்டுக்கு... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

போடி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். போடி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடு... மேலும் பார்க்க

மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை அருகே மது அருந்துவதற்கு பணம் தராததால் மனைவியை குத்திக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. மயிலா... மேலும் பார்க்க

புதுமாப்பிளை தற்கொலை

தேனி மாவட்டம், கம்பத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புதுமாப்பிளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கம்பம் மாரியப்பன்குடும்பன் தெருவைச் சோ்ந்த அஜித்(26), ராஜபாளையத்தைச் சோ்ந்த சினேகா (24) ஆகிய இவருக்கும... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: தோட்டத் தொழிலாளா்கள் பாதிப்பு

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழக - கேரள எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் தோட்டத் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டனா். நாடு முழுவதும் புதன்கிழமை தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தப் போராட்... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் எள் பொட்டலம் விற்பனை ரூ.60 லட்சத்துக்கு ஏலம்

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் எள் பொட்டலம் விற்பனை செய்வது ரூ.60.18 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி காரணமாக பூஜைப் பொருள்கள், மண் காகம் விற்பனையை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. தேனி மாவட்ட... மேலும் பார்க்க