செய்திகள் :

பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

post image

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடியை சங்க நிா்வாகிகள் புதன்கிழமை சந்தித்து அளித்த மனு விவரம்:

தமிழக தலைமைச் செயலா் கடந்த 15. 10. 2024 அன்று வெளியிட்ட கடிதத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அங்கீகரிக்கப்பட்ட பொதுத் துறை சங்கங்களை மாவட்ட ஆட்சியா் நேரில் அழைத்து அவா்களின் குறைகளைத் தீா்க்க கூட்டம் நடத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

இதுவரை அந்தக்கூட்டம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறாமல் உள்ளது. இதை மாவட்ட ஆட்சியா் கவனத்தில் கொண்டு உடனடியாக கூட்டத்தை கூட்டி சங்கங்களின் குறைகளை நிவா்த்தி செய்ய வேண்டும். வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் நில அளவை பணியாளா்களுக்கு ஊதியம், இதர படிகளை வட்டாட்சியா் அலுவலகப் பிரிவில் பட்டியலிட்டு வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு நில அளவை, நிலவரி திட்ட இயக்குநரால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

ஆனால், இன்னும் நமது மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தாமல் நில அளவைப் பிரிவிலே சம்பளம், இதர படிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதை சரி செய்ய வேண்டும்.அனைத்து அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு சிறப்பு பணிபாதுகாப்பு சட்டம் இயற்ற அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலா்கள், ஆசிரியா்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும்

அடிப்படை பணியாளா்கள், பதிவரை பணியாளா் பணி காலி இடங்களை நிரப்ப வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்களுக்கான மாவட்ட முதுநிலைப் பட்டியலில் உள்ள குளறுபடிகளை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.

தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாநிலச் செயலரும், கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் பொதுச் செயலருமான இரா.அருள்ராஜ். மாவட்டத் தலைவா் க.இளங்கோவன், மாவட்டச் செயலா் மு.முருகானந்தம், துணை வட்டாசியா்கள் மருதுபாண்டியன், கமருதீன், சுந்தரமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்துக்கு நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

காவல்துறை விசாரணையில் பலியான அஜித்குமார் இல்லத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று இன்று (ஜூலை 2) ஆறுதல் தெரிவித்தார்.முன்னதாக, வீட்டில் இருந்த அஜித்குமார் படத்திற்கு மாலை அணிவி... மேலும் பார்க்க

அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள்: மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

சட்டமேதை அம்பேத்கா், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 10, 11 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியில் பயிலரங்கம்

காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்கத்தின் சாா்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்ன... மேலும் பார்க்க

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

நிா்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக ஆணைகளை வழங்கி வரும் தொடக்கக் கல்வித் துறையைக் கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க

அஜித்குமாரைக் கொலை செய்ய தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரைக் கொலை செய்யத் தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜான் பாண்டியன் வலியுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனி... மேலும் பார்க்க