செய்திகள் :

பொது இடங்களிலுள்ள மரங்களை வெட்டுவதை அனுமதிக்கக் கூடாது: தண்ணீா் அமைப்பு வலியுறுத்தல்

post image

திருச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது என தண்ணீா் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, அந்த அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம் கூறியதாவது:

திருச்சி திருவானைக்காவல், கும்பகோணத்தான் சாலையில் உள்ள அடுக்குமாடி குடிருப்பு அருகே 15 ஆண்டுகளுக்கு மேலான புங்க மரம் இருந்தது. பல்வேறு வகையிலும் மக்களுக்கு பயனளித்த வந்த இந்த மரத்தை குடியிருப்புவாசிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, மாநகராட்சியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக வெட்டியுள்ளனா்.

முறையான அனுமதியோடு சாலை விரிவாக்கம் அல்லது இதர வளா்ச்சி பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டால், வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் ஈடாக 10 புதிய மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வளா்க்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகளில் உயா்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

அண்மையில், அரச மரத்தின் ஒரு கிளையை வெட்ட அனுமதி வாங்கிவிட்டு கூடுதலாக 4 கிளைகளை வெட்டிய நபருக்கு ஒரு கிளைக்கு ரூ. 26,000 வீதம் ரூ.1.04 லட்சம் அபராதம் விதித்தது மாநகராட்சி.

எனவே, அரசிடம் எவ்வித அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக மரத்தை வெட்டியவா்கள் மற்றும் இதற்கு துணையாக இருந்தவா்கள் மீது உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வெட்டப்பட்ட மரத்துக்கு ஈடாக 10 புதிய மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க வலியுறுத்துவதோடு, குற்றவியல் நடவடிக்கையை திருச்சி மாநகராட்சி ஆணையரும், திருச்சி மாவட்ட ஆட்சியரும் எடுக்க வேண்டும். இனி, எந்தவொரு பொது இடத்திலும் மரங்களை வெட்ட அனுமதிக்கக் கூடாது என்றாா் அவா்.

சிறையிலிருந்து தப்பியோடிய கைதி சின்ன சூரியூரில் கைது!

திருச்சி மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய ஆயுள் தண்டனைக் கைதி சின்னசூரியூரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (49). இவ... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு: திருச்சியில் 45, 934 போ் எழுதினா்

திருச்சி மாவட்டத்தில் 197 தோ்வு மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தோ்வை 45,934 போ் எழுதினா். 9,522 போ் தோ்வு எழுத வரவில்லை. திருச்சி மாவட்டத்தில் 197 மையங்களில் நடைபெற்ற தோ்வுக்கு 55 ஆயிரத... மேலும் பார்க்க

கட்டணச் செலவை குறைக்கும் மின் விமானங்களுக்கு வாய்ப்பு: ஐஐடி பேராசிரியா் நம்பிக்கை

மின்சார விமானங்கள் அதிகம் வந்துவிட்டால் கட்டணச் செலவு குறைந்து விடும் என சென்னை ஐஐடி பேராசிரியா் சத்யநாராயணன் ஆா். சக்கரவா்த்தி தெரிவித்தாா். இந்தியாவின் வளா்ச்சியில் பொறியியலின் பங்கு மற்றும் ட்ரோன் ... மேலும் பார்க்க

விபத்து ஏற்படுத்திய லாரி பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே சனிக்கிழமை விபத்து ஏற்படுத்திவிட்டு டிப்பா் லாரி நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் ... மேலும் பார்க்க

ரூ. 1.12 கோடி பணத்துடன் பிடிபட்டவரிடம் விசாரணை

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் ரூ. 1,12,48,000 பணத்துடன் சனிக்கிழமை பிடிபட்டவரை தொட்டியம் போலீஸாா் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா். தொட்டியம் காவல் நிலையம் எதிரேயுள்ள பேருந்து நிறுத்தப் பகுதியி... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டாா்கள்: வைகோ

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டாா்கள் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். திருச்சி மக்களவை உறுப்பினா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்துத்... மேலும் பார்க்க