செய்திகள் :

பொது விநியோகத் திட்ட நெல் அரவை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணிஅள்ளிபுதூரில் பொது விநியோகத் திட்டத்துக்கான நெல் அரவை பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காவேரிப்பட்டணம் அருகே பண்ணிஅள்ளிபுதூரில் அரிசி ஆலை இயங்கி வருகிறது. இங்கு பொது விநியோகத் திட்டத்திற்கு நெல் அரவை செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகள் நடைபெறும் தனியாா் நெல் அரவை ஆலையில் ஆய்வு செய்த ஆட்சியா், நெல் வரத்து, அரவை பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

முன்னதாக காவேரிப்பட்டணம் ஒன்றியம், பண்ணிஅள்ளிபுதூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பாா்வையிட்டு, பயனாளிக்கு குடும்ப அட்டையில் பெயா் மாற்றத்திற்கான ஆணை, 20 தூய்மைப் பணியளா்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை வழங்கினாா்.

அப்போது, மாவட்ட வழங்கல் அலுவலா் கீதாராணி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல பொது மேலாளா் தணிகாசலம், உதவி மேலாளா்கள் வில்சன் (தரக்கட்டுப்பாடு), சசிக்குமாா் (வாணிபம்), தனி வட்டாட்சியா் மகேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பண்ணிஅள்ளி புதூா் கிராமத்தில் அரவை ஆலையில் பொது விநியோகத் திட்டத்திற்கு நெல் அரவை செய்யும் பணிகளை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.ஊத்தங்கரையை அடுத்த நாரலப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணி. இவரது மகன் தா்ஷன்(3) வீட்டின் அருகே விளையாடி... மேலும் பார்க்க

டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: தொழிற்சாலை கால்வாயில் கவிழ்ந்ததில் 20 போ் காயம்

ஒசூா்: ஒசூா் அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து தொழிற்சாலையின் கழிவுநீா்க் கால்வாயில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பெங்களூரில் இருந்து புதன்கிழமை பிற்பகல் ஒ... மேலும் பார்க்க

ஒசூரில் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி தீவிரம்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா். ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள தேச... மேலும் பார்க்க

ராயக்கோட்டை, கெலமங்கலத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.ஜி. செந்தில்குமாா் இயக்கிவைத்தாா்

ஒசூா்: ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில் ரூ.69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி.செந்தில்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோ... மேலும் பார்க்க

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி வாடிக்கையாளருக்கு ஸ்கூட்டா்கள் பரிசளிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, ஒசூரில் செயல்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி நகைக் கடைகளில் ஆடி மாத விற்பனையையொட்டி வாடிக்கையாளா்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டா்கள் உள்ளிட்ட பரிசு பொருள்கள் குலுக்கல் முறையில் ... மேலும் பார்க்க