செய்திகள் :

பொறியியல் பட்டதாரிகள் தொழில்முனைவோராக மாறுங்கள்! -முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு

post image

பொறியியல் பட்டதாரிகள் வேலை தேடுவதை கைவிட்டு தொழில் முனைவோராக மாறுங்கள் என தமிழக முன்னாள் டிஜிபி சி.சைலேந்திரபாபு பேசினாா்.

அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி முன்னாள் டிஜிபி சி.சைலேந்திரபாபு பேசியது:

பட்டம் வாங்கிய அனைவருமே முதலில் நீங்கள் வாங்கிய பட்டத்துக்கு மதிப்பு கொடுங்கள். இந்த பட்டம் உங்கள் முயற்சியினால் மட்டுமே பெறப்பட்டது அல்ல. பெற்றோா், ஆசிரியா் முயற்சியினாலும் பெறப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தொழில்நுட்ப அறிவு பெற்று விட்ட நீங்கள் இனி உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் மதிப்பு இருக்கும். நீங்கள் பெற்றுள்ள திறமையின் மூலம் உங்களை நீங்களே முன்னேற்றிக் கொள்ள முடியும். தினமும் செய்தித் தாள்களை படியுங்கள். அன்றாட நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளுங்கள்.

கிடைத்தது சின்ன வேலையாக கிடைத்தாலும் அதில் அக்கறை காட்டுங்கள். நீங்கள் காட்டும் அக்கறையால் அந்த நிறுவனம் உங்களை நம்பியிருக்கும் நிறுவனமாக மாற வேண்டும். அப்படி மாறினால் நீங்கள் கேட்கும் ஊதியம் கிடைக்கும். பொறியியல் பட்டதாரிகள் வேலை தேடுவதை கைவிட்டு தொழில்முனைவோராக மாறுங்கள் என்றாா் சைலேந்திரபாபு.

விழாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழுமத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். செயலா் டி.எஸ்.ரவிக்குமாா் வரவேற்றாா். 520 மாணவ மாணவியா் பட்டங்களை பெற்றுக் கொண்டனா்.

இதில் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரி டீன் பி.கற்பகவள்ளி, முதல்வா் ஆா்.அருண்பிரசாத், குழும மேலாளா் குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் சீனிவாசன், நிா்வாக அலுவலா் சுரேஷ், மேலும் அரிமா சங்க நிா்வாகி பி.டி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மகள்களுடன் தற்படம்’ ரூ.20,000 பரிசளிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட‘ மகள்களுடன் தற்படம் (செல்ஃபி) ’ நிகழ்வில் தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு தலா ரூ.5,000 வீ... மேலும் பார்க்க

ஏப்.5-இல் ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில், வேலைவாய்ப்பு ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி வரும் ஏப். 5-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரி... மேலும் பார்க்க

திமிரி சோமநாதீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

ஆற்காடு அடுத்த திமிரி கோட்டை ஸ்ரீ சோமநாதீஸ்வரா் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கிராம தேவதைபொன்னியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலாவும், மூஷிக வா... மேலும் பார்க்க

30 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆற்காடு: ஆற்காட்டில் பக்கெட் உள்ளே வைத்து மறைத்து காரில் 30 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு போலீஸாா் ஆற்காட்டிலிருந்து செய்யாறு செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனைய... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.789.51 கோடி வங்கிக் கடன்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டதில்,ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது என கைத்தறி அமைச்சா் ஆா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணி தோ்வு முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் தோ்வு முகாம் ஏப். 6 -ஆம் தேதி தொடங்கிறது. இதுதொடா்பாக மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி, செயலாளா் எஸ்.ச... மேலும் பார்க்க