செய்திகள் :

பொள்ளாச்சி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்; வீடியோ வெளியிட்ட மாணவிகள்; பின்னணி என்ன?

post image

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 700 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்தப் பள்ளியின் இசை ஆசிரியர் மற்றும் தாவரவியல் ஆசிரியர் ஆகியோர் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்துள்ளது.

பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் புகார்
பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் புகார்

பள்ளியின் இசை ஆசிரியர் மாணவிகளுக்கு நடனம் பயிற்சி கற்றுக் கொடுக்கும்போது மாணவிகள் மீது கை வைத்து கற்றுக் கொடுப்பதாகவும், தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. 

இதேபோல தாவரவியல் ஆசிரியரும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் 3 பேர் தங்களின் முகங்களை துணியால் மூடிக்கொண்டு வீடியோ மூலம் வாக்குமூலம் அளித்து கல்வித்துறை மற்றும் காவல்துறைக்குப் புகார் அனுப்பியுள்ளனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தப் புகாரை அடுத்து காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையில் பள்ளியில் இருக்கும் மாணவிகள் யாரும் பாலியல் குற்றச்சாட்டைச் சொல்லவில்லை. இதையடுத்து அந்த வீடியோவை வெளியிட்டது யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

பாலியல் சீண்டல்
பாலியல் சீண்டல்

அதில் அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியின் தாய் தான் வீடியோவை வெளியிட்டார் எனத் தெரிந்தது. அவருக்கு சம்மன் அனுப்பி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாணவியின் தாய், “பள்ளியில் தொடர்ச்சியாக நிறைய தவறுகள் நடக்கின்றன. இதுகுறித்து தமிழக முதல்வர் வரை புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. அதனால் தான் வீடியோ எடுத்து வெளியிட்டோம். வீடியோவில் பேசிய 3 மாணவிகளில் ஒருவர் என்னுடைய மகள்.

காவல்துறை
காவல்துறை

அந்த ஆசிரியர்கள் அரசியல் பின்புலத்தில் தப்பித்து வருகிறார்கள்” என்றார்.

இதனிடையே பள்ளி நிர்வாகத்திற்கும், அந்த மாணவியின் பெற்றோருக்கும் தனிப்பட்ட பிரச்னை நிலவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மும்பை: ஒரு வங்கிக்கணக்கு விலை ரூ.7000; ஏழைகளிடம் வங்கிக்கணக்கை வாடகைக்கு வாங்கி மோசடி செய்த கும்பல்

சமீபகாலமாக இணையத்தளக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடன் தருவதாகவோ அல்லது பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் கைது எனப் பல்வேறு வழிகளில் சைபர் கிரிமினல்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பறித்து வருகின்றனர். இ... மேலும் பார்க்க

மும்பை: ரயில் குப்பை தொட்டியில் 6 வயது குழந்தையின் பிணம்; விசாரணையில் பகிர் தகவல்; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்திலிருந்து மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரயில் நிலையம் வந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் கழிவறைக்குள் இருந்த குப்பை தொட்டிகளை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது ஒரு குப்பை த... மேலும் பார்க்க

Cyber Crime: வாட்ஸ்ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழ்; திறந்து பார்த்ததால் ரூ.2 லட்சத்தை இழந்த நபர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழைத் திறந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். அங்குள்ள ஹிங்கோலி மாவட்டத்தில் வசிக்கும் அரசு ஊழியர் சுக்ராம் ஷிண்டே என்பவருக்கு அ... மேலும் பார்க்க

SBI வங்கியில் ரூ.2000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு நெருக்கமான இடங்களில் CBI ரெய்டு

தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்நிறுவனங்கள் இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி க... மேலும் பார்க்க

திருப்பூர்: போன் செயலியில் கிடைத்த நட்பு; ரூ.92,000-ஐ பறிகொடுத்த இளைஞர்; 4 பேர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாணிக்கபுரம் சாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கிரைண்டர் என்ற செல்போன் ஆஃப் மூலம் சபரிராஜன் என்பவரிடம் பழகி உள்ளார். இந்நிலையில், அந்த இளைஞரைத் தனிமையில் சந்த... மேலும் பார்க்க

சென்னை: உடன் பழகிய இளைஞருக்குத் திருமணம்; திருநங்கை செய்த விபரீத செயல்; என்ன நடந்தது?

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜித்,(30). இவர் சென்னை, மதுரவாயிலில் தங்கி, வானகரத்திலுள்ள அவரின் தாய் மாமாவின் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் அஜித்துக்கும்... மேலும் பார்க்க