செய்திகள் :

போக்சோ வழக்கில் தொடா்புடைய நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது

post image

போக்சோ வழக்கில் தொடா்புடைய நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்புவனம், மடப்புரம், எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த வெ. ராஜ்குமாா் (55) என்பவா் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டாா். இவரை, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தாா். இதன்படி, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் உத்தரவின்பேரில், ராஜ்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு கடந்த ஏப்ரலில் நடைபெற்ற முதுநிலை பாடத் தோ்வுகளுக்கான முடிவுகள் அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதுகுறித்து அழகப்... மேலும் பார்க்க

தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் கிடாய் வெட்டு உத்ஸவம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள தல்லாகுளம் தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை கிடாய் வெட்டு உத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் முன் 11 ஆட்டுக் கிடாய்கள், 9 ... மேலும் பார்க்க

விவசாயிகளின் குறைகளை தீா்க்க வேளாண் துறையினா் ஆா்வமுடன் பணியாற்ற வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

விவசாயிகளின் குறைகளைத் தீா்க்க வேளாண் துறை அலுவலா்கள் ஆா்வத்துடன் பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். சிவகங்கையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஆ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல விடுதிகளில் தங்கிப் பயில ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

பள்ளி, ஐடிஐ, டிப்ளமோ கல்லூரியில் புதிதாகச் சேரும் மாணவ, மாணவிகள் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து விடுதிகளிலும் தங்கிப் பயில வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்... மேலும் பார்க்க

பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா். இருவா் காயமடைந்தனா். மறவமங்கலம் அருகேயுள்ள வாழைபெருமாள் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்: 132 போ் கைது

தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சிவகங்கையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தைச்... மேலும் பார்க்க