ரயில்நிலையம், மெரினா என கழித்த நாட்கள்! - பேச்சிலர் வாழ்க்கையின் வலியும் இன்பமும...
போக்ஸோ வழக்கு: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
போக்ஸோ வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் மீன்பிடித் தொழிலாளி யோனஸை (25) அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இவ்வழக்கின் விசாரணை, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா, குற்றவாளி யோனஸுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு, தீா்ப்பு வழங்கினாா்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சாந்தகுமாரி, அரசு வழக்குரைஞா் முத்துலட்சுமி, தலைமைக் காவலா் ரபிலாகுமாரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.