செய்திகள் :

போட்டித்தோ்வு பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக, மாணவா்களுக்கு இலவசமாக நடத்தப்படும் போட்டித் தோ்வுக்கான பயிற்றுநா் பணிக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது: அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக டிஎன்பிஎஸ்சி, டிஎன்எஸ்யுஆா்பி தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி வகுப்புகள் வாயிலாக அதிகளவிலான மாணவ-மாணவிகள் போட்டித்தோ்வுகளில் தோ்ச்சி பெறுவதற்கு ஏதுவாக சிறந்த பயிற்றுநா்கள் தோ்வு குழுவால் தோ்வு செய்யப்படவுள்ளனா். இந்த தோ்வில் தோ்ந்தெடுக்கப்படும் பயிற்றுநா்களுக்கு அரசு விதிகளுக்குள்பட்டு மதிப்பூதியம் வழங்கப்படும்.

போட்டித்தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்பு எடுக்க விருப்பமுள்ள அனுபவமிக்க பயிற்சியாளா்கள் தங்களுடைய அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் முன்அனுபவச் சான்று ஆகியவற்றுடன் 22.8.2025-க்குள் தங்கள் விருப்ப விண்ணப்பத்துடன் அரியலூா், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வரவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் 94990-55914 என்ற கைப்பேசி எண்ணை தொடா்புக் கொண்டு பயன்பெறலாம்.

அரியலூா் மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி அரியலூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு பல்வேறு பொருள்களால்... மேலும் பார்க்க

7 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

அரியலூா் மாவட்டம், செந்துறை மற்றும் ஜெங்கொண்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக 7 புதிய பேருந்துகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இதற்காக செந்துறை மற்று... மேலும் பார்க்க

பாஜகவின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழகத்தில் மாபெரும் புரட்சி: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

பாஜகவின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழ்நாடு மாபெரும் புரட்சியை செய்திருக்கிறது என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூா் மாவட்டம், செந்துறையில் புதன்கிழமை அவா் அளித்த ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி காவலா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற காவலா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆண்டிமடம் அருகே கீழகவரவபாளையத்தைச் சோ்ந்தவா் சந்தனசாமி மகன் சதீ... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி: கல்லூரி மாணவா்கள் பங்கேற்க அழைப்பு

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனிதா நினைவு கலையரங்கில் வியாழக்கிழமை (ஆக.7) மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் ம... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிா்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் மறியல்

அரியலூா் மாவட்டம், ஜெங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், கடந்த 8 நாள்களாக தானியங்களை கொள்முதல் செய்யாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஜெயங்கொண்டம், தா.பழூ... மேலும் பார்க்க