செய்திகள் :

போதைப்பொருள் கடத்தல்; அமெரிக்க FBI தேடிவந்த இந்திய வம்சாவளி... பஞ்சாப்பில் கைதுசெய்த போலீஸ்!

post image

அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் ஷெஹ்னாஸ் சிங். இவர் கொலம்பியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு போதைப்பொருள் கடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 26ம் தேதி அமெரிக்காவில் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி சிங்கின் கூட்டாளிகள் அம்ரித்பால் சிங், ஷீமா, தக்திர் சிங், ஷபி மற்றும் ஃபெர்னாண்டோ ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 391 கிலோ எம்.டி போதைப்பொருள், 109 கிலோ கொகைன் போதைப்பொருள், 4 துப்பாக்கிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ‌ஷெஹ்னாஸ் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்துவிட்டார். அங்கிருந்து ஷெஹ்னாஸ் இந்தியாவிற்கு தப்பித்து வந்தார். இந்தியாவில் ஏற்கெனவே ஷெஹ்னாஸ் சிங்கை பஞ்சாப் போலீஸார் தேடி வந்தனர்.

பஞ்சாப்பிற்கு வந்ததும் அவரை போலீஸார் கைதுசெய்தனர். இது குறித்து பஞ்சாப் டிஜிபி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ``அமெரிக்காவில் எஃப்.பி.ஐ.யால் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஷெஹ்னாஸ் சிங் கைது செய்யப்பட்டுள்ளான். அமெரிக்க அதிகாரிகள் ரெய்டு நடத்தி போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தவுடன் ஷெஹ்னாஸ் இந்தியாவிற்கு தப்பி வந்தான். சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்துவதில் ஷெஹ்னாஸ் முக்கிய பங்கு வகித்தான். போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கூடாரமாக பஞ்சாப் மாறுவதை தடுக்க பஞ்சாப் போலீஸார் சர்வதேச விசாரணை அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே பஞ்சாப் முழுவதும் போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கடந்த மாதம் 28ம் தேதி மாநில 5 பேர் கொண்ட உயர் மட்டக்கமிட்டி ஒன்றை அமைத்திருக்கிறது.

வேளாங்கண்ணி: திருமணம் மீறிய உறவு; கணவரைக் கொன்றுவிட்டு நாடகம்- ஆண் நண்பருடன் மனைவி சிக்கியது எப்படி?

கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனா (22). இவரது காதலி எலன் மேரி (21). இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். தனியார் விடுதியில் அரை எடுத்து தங்கியவர்கள் வ... மேலும் பார்க்க

பீகார்: பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல்! - ரூ.25 கோடி மதிப்பிலான நகை கொள்ளை

பீகாரின் அர்ராவில் உள்ள தனிஷ்க் ஷோரூமில் இன்று ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர். பீகார் மாநிலம், அர்ரா காவல் நிலையப் பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

ஸ்ரேயா கோஷல் கரியர் பற்றி பரவிய நியூஸ்; 'அது பொய்... உஷாராக இருங்கள்!'- மக்களை எச்சரிக்கும் டி.ஜி.பி

சமீபத்தில், 'பாடகி ஸ்ரேயா கோஷலின் கரியர் முடியப்போவதாகவும், அதற்கு காரணம் அவர் மைக் ஆன் ஆகியிருப்பது தெரியாமல் பேசியதும்' என்ற போஸ்ட் மற்றும் நியூஸ் லிங்க் வைரலாகியது. இப்படி பரவிய இந்த நியூஸ் லிங்க் ... மேலும் பார்க்க

5 கொரிய பெண்கள்; Excel Sheet, ரகசிய கேமரா- ஆஸ்திரேலியாவில் பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய வம்சாவளி!

ஆஸ்திரேலியாவில் ஐந்து தென்கொரிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக பிரமுகருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்து வருபவர் பாலேஷ் தன்கர். இந... மேலும் பார்க்க

பள்ளிக் காதலால் சந்தேகம்; மனைவியை சிக்கவைக்க விஷம் குடித்த புது மாப்பிள்ளை பலி - நடந்தது என்ன?

கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும், மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த பிரியா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்பவருக்கும் கடந்த ஜனவரி 25-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலைய... மேலும் பார்க்க

திருப்பதி கோயில் வீடியோ விவகாரம்: TTF வாசனின் வங்கி கணக்கு முடக்கம்

டி.டி.எஃப் வாசன் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. தனது வீடியோக்கள், செயல்கள் ஆகியவற்றால் தொடர்ந்து சர்ச்சையில் மாட்டி வருகிறார் டி.டி.எஃப் வாசன். கடந்த ஆண்டு, ஜூலை மாதம் திருப்பதிக்கு சென்றிருக்கிறார் ... மேலும் பார்க்க