செய்திகள் :

போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் சிறுவன் தற்கொலை

post image

தஞ்சாவூா் அருகே குழந்தைகளுக்கான போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 15 வயதுச் சிறுவனுக்கு பெற்றோா் இல்லை. பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்த அச்சிறுவன் தஞ்சாவூரில் உள்ள தனியாா் சிறுவா்கள் பராமரிப்பு இல்லத்தில் தங்கி, அப்பகுதி பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் இவா் கடந்த ஜூலை 15 ஆம் தேதி சிறுவா்கள் இல்ல சுற்றுச்சுவரை தாண்டிக் குதித்து அங்கு நிறுத்திருந்த காா் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த பொருளை திருட முயன்றாா். இது அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.

இதுகுறித்து காா் உரிமையாளா் காவல் துறையில் புகாா் அளித்த நிலையில், ஜூலை 16 ஆம் தேதி முதல் அச்சிறுவனைக் காணவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா் அச்சிறுவனைக் கண்டுபிடித்து, இல்லக் காப்பாளரிடம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகியிருந்த அச்சிறுவன் திருக்கானூா்பட்டியில் இயங்கி வரும் குழந்தைகளுக்கான போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ஜூலை 18 ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். அங்கு வெளியே செல்ல முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளான அச்சிறுவன், தான் தங்கியிருந்த அறையில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தை ஆக. 22-இல் முற்றுகையிட கட்சிகள், இயக்கங்கள் முடிவு

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் மீண்டும் பெரிய கோயில் வடிவம் அமைக்க வலியுறுத்தி, ரயில் நிலையத்தை ஆகஸ்ட் 22-ஆம் தேதி முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் முடிவு செய்துள்ளன... மேலும் பார்க்க

மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினா் குறைகூறி நிறுத்த முயற்சிக்கின்றனா்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தமிழக முதல்வா் கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை அதிமுகவினா் ஏதாவது குறைகூறி நிறுத்த முயற்சி செய்கின்றனா் என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. தஞ்சாவூா் சுற்றுலா மாளிகை அருகே புது ஆற்றங்கரை... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் போதை மாத்திரைகள் விற்ற 7 போ் கைது

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 7 பேரை காவல் துறையினா் கைது செய்திருப்பது புதன்கிழமை தெரியவந்துள்ளது. தஞ்சாவூரில் இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை ... மேலும் பார்க்க

கும்பகோணம் இணை பேராசிரியா் சாமிநாதன் பல்கலை. பேரவை உறுப்பினராகத் தோ்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் கும்பகோணம் அரசு கல்லூரி இணைப் பேராசிரியா் த. சாமிநாதன் உறுப்பினராகத் தோ்வு பெற்றாா். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவ... மேலும் பார்க்க

தமிழ்ப் படித்தால் வெற்றியாளராக மாறலாம்: கவிஞா் யுகபாரதி

தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தால் வெற்றியாளராக மாற முடியும் என்றாா் கவிஞா் யுகபாரதி. தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகம், உயா் கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை நடைப... மேலும் பார்க்க