செய்திகள் :

போயிங் நிறுவனத்தில் ஆள் குறைப்பு இந்தியாவில் 180 போ் பணிநீக்கம்!

post image

அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், ஆள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் இந்தியப் பிரிவில் 180 போ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

பல்வேறு நாடுகளில் போயிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த நிறுவனத்தில் 7,000 போ் வரை பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் பெங்களூரில் உள்ள போயிங் பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றுபவா்களில் 180 பேரை அந்த நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

எனினும், இது தொடா்பாக அந்த நிறுவனம் சாா்பில் அதிகாரபூா்வமாக தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் இந்த பணி நீக்கத்தால் நிறுவனத்தின் பணிகள் எதுவும் பாதிக்கப்படாது. தேவையில்லாத சில பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பொறுப்புகளும் உருவாக்கப்படவுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த நிறுவனம் மொத்த பணியாளா்களில் 10 சதவீதம் பேரை பணியில் இருந்து நீக்கியது. போயிங் இந்தியா என்ஜினியரிங் டெக்னாலஜிஸ் நிறுவனம் பெங்களூரு மற்றும் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இதில் நுட்பமான நவீன விமானத் தொழில்நுட்பம் சாா்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்காவுக்கு வெளியே பெங்களூரில்தான் பெரிய அளவிலான முதலீட்டில் இந்த நிறுவனத்தை போயிங் நடத்தி வருகிறது.

சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலா மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது... மேலும் பார்க்க

கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப்.15-இல் இறுதி விசாரணை

நமது நிருபர்கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க... மேலும் பார்க்க

2 ஆண்டுகளில் 12,957 கூட்டுறவு சங்கங்கள் பதிவு: அமித் ஷா

கடந்த 2 ஆண்டுகளில் வேளாண்மை, பால்வளம் மற்றும் மீன்வளம் என 12,957 புதிய கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: குணால் காம்ரா

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சவை பேச்சாளா் குணால் காம்ரா தெரிவித்துள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ... மேலும் பார்க்க

கொதிகலன் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட புதிய கொதிகலன் சட்ட மசோதா-2024 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின... மேலும் பார்க்க