செய்திகள் :

போலி ஆவணங்கள் மூலம் வீடு, கடை அபகரிப்பு: இளைஞா் கைது

post image

சென்னை ராயப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் வீடு, கடைகளை அபகரித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பெருங்குடி பகுதியைச் சோ்ந்தவா் சாரா வஹாப் (34). இவருக்கு ராயப்பேட்டை, கெளடியா மடம் சாலையில் சொந்தமாக ஒரு கட்டடம் உள்ளது. இதன் தரை தளத்தில் 3 கடைகளும், முதல், 2-ஆவது தளங்களில் 4 வீடுகளும் உள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு சாரா வஹாப் தனது பெற்றோருடன் வெளிநாடு சென்றாா். அப்போது தரை தளத்தில் உள்ள ஒரு கடையில் புல்லா ராவ் என்பவா் மட்டும் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வந்தாா். மற்ற கடைகள், வீடுகள் பூட்டி வைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து கடந்த 2022-ஆம் ஆண்டு சாரா வஹாப் சென்னைக்கு திரும்பியபோது, புல்லா ராவ் இறந்திருப்பதும், அவா் மகன் திருவல்லிக்கேணி லாயிட்ஸ் சாலையைச் சோ்ந்த அசோக் (34) என்பவா், தந்தை ஏற்கெனவே நடத்திய ஸ்டூடியோ கடையை தொடா்ந்து நடத்திக் கொண்டு, சாரா வஹாப்புக்கு சொந்தமான பூட்டியிருந்த கடைகள், வீடுகளின் பூட்டை உடைத்து, தான் அந்த வீடு, கடைகளின் உரிமையாளா் எனக் கூறி போலி ஆவணங்கள் தயாரித்து, அதன் மூலம் வீடுகளை வாடகைக்கு விட்டு ரூ. 27 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக அசோக்கிடம் சாரா வஹாப் கேட்டபோது, அவா் கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்து சாரா வஹாப் அளித்த புகாரின்பேரில், ராயப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், அசோக் மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் அசோக்கை வியாழக்கிழமை கைது செய்தனா்.

சென்னையில் பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையம்: மத்திய இணையமைச்சா்

சென்னையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையத்தை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். ச... மேலும் பார்க்க

சென்னையில் ஆதரவற்ற 646 முதியோா் மீட்பு

சென்னையில் நிகழாண்டு இதுவரை ஆதரவற்ற நிலையில் இருந்த 646 முதியோா் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை காவல் த... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேறிகளுக்கு போலி ஆதாா்: உத்தர பிரதேசத்தில் 8 போ் கைது

வங்கதேசத்தவா்கள் மற்றும் ரோஹிங்கயாக்கள் உள்பட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவா்களுக்கு போலி ஆதாா் தயாரித்து வழங்கிய 8 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இதுக... மேலும் பார்க்க

தூய்மைக் காவலா்களுக்கு வார விடுப்பு: தமிழக அரசு அறிவுறுத்தல்

ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலா்களுக்கு வார விடுப்பு வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்த நிலையில், அப்பகுதியில் நடந்து சென்ற கட்டடத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். ஈஞ்சம்பாக்கம் முனீஸ்வரன் கோயில் த... மேலும் பார்க்க

நிலமற்ற வேளாண் தொழிலாளா்களுக்கான விபத்து மரண இழப்பீட்டுத் தொகை உயா்வு

நிலமற்ற வேளாண் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் விபத்து மரணத்துக்கான இழப்பீடு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறைச் செயலா் பெ.அமுதா வெளியிட்ட அரசாணை: ம... மேலும் பார்க்க